வைகாசி விசாகம்; திருச்செந்தூரில் நடக்கும் சிறப்பு நிகழ்வுகள் என்னென்ன?

0

முருகப் பெருமானின் ஜன்ம நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திர தினமே வைகாசி விசாகப் பெருந்திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. விசாகத் திருநாளில் முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபடுவதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதிகம். இத்தகைய பிரசித்தி பெற்ற வைகாசி விசாகத் திருவிழா  ஜூன் 2-ம் தேதி நடக்கிறது. தீமைகளை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான்.

பாதயாத்திரை பக்தர்கள்

பங்குனி மாதத்தின் ‘உத்திரம்’, தை மாத’ பூசம்’ போல, கார்த்திகை மாதத்தின் ‘கார்த்திகை’ போல, வைகாசி மாதத்தில் ‘விசாகம்’ முருகக் கடவுளுக்கு உகந்த அற்புதமான நாள்.இந்த நாளில் அரளி, செம்பருத்தி, ரோஜா போன்ற சிவப்பு நிற  மலர்களை அர்ச்சித்து வழிபட்டு கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம்.  வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகிறது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும் என்கிறார்கள்.

வைகாசி விசாக நிகழ்வுகள்:

இன்று அதிகாலை நள்ளிரவு 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.அதிகாலை  1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை சிறப்புடன் நடந்தது. அதிகாலை 2 மணிக்கு  உதயமார்த்தாண்ட அபிஷேகமும் அதிகாலை 2.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. அதிகாலை 3 மணி முதல் 8.30 மணி வரை கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

சுவாமி ஜெயந்திநாதர்

காலை 9 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறும். இதையொட்டி சிறப்பு தீபாராதனை நடக்கும். மாலை 4 மணிக்கு மூலவர்க்கு சாயரட்சை தீபாரதனை நடைபெறும்.

மாலை 4.30 மணி உற்சவர் சுவாமி ஜயந்திநாதர், தங்கசப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வர். மாலை 6 மணிக்கு வைகாசி விசாக நிகழ்வின் முக்கியத்துவம் வாய்ந்த முனிக்குமார்களுக்கு  சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 6.30 மணிக்கு தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளி வீதியுலாக் கண்டருள்வார். 

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மட்டுமில்லாமல் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரையாகத் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.  ஆங்காங்கே பக்தர்கள் குழுமி முருகனின் பாடல்களைப் பாடலாகப் பாடியும், ஆடியும் வருகிறார்கள்.

கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூரில் திரும்பும் திசையெங்கும் ’அரோகரா’ கோஷம் விண்ணை முட்டுகிறது. கடல் மற்றும் நாழிகிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் முடி காணிக்கை செலுத்தியும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள்.


மேலும் படிக்க வைகாசி விசாகம்; திருச்செந்தூரில் நடக்கும் சிறப்பு நிகழ்வுகள் என்னென்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top