கடதல பனஷனல ஏன இததன கழபபஙகள?

0

ஓய்வு பெற்றபிறகு அதிகமாக பென்ஷன் பெற விரும்புகிறவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மூன்றாவது முறையாக நீட்டித்திருக்கிறது தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு (EPFO). கூடுதல் பென்ஷன் பெற விரும்புகிறவர்கள் வருகிற 11-ம் தேதிக்குள் விண்ணப்பதை சமர்ப்பித்துவிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தில் நிலவும் குழப்பமான நடைமுறைகளைப் பார்த்தால், கடைசி தேதியானது இன்னொரு முறைகூட நீட்டிக்கப்படுமோ என்கிற கேள்விதான் பிறக்கிறது!

தற்போதைய நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மிகக் குறைந்த அளவிலேயே பென்ஷன் பெறுகின்றனர். இவர்கள் அதிகமாக பென்ஷன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தபின், இந்தக் கூடுதல் பென்ஷன் பெறும் திட்டத்தை தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு அறிவித்தது. இந்தத் திட்டத்தைக் கொண்டுவரும்போதே, இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கூடுதல் பென்ஷனுக்கான பணம் எப்படிக் கிடைக்கும், எந்தப் பணத்தில் இருந்து எடுத்துத் தரப்படும், தற்போது கிடைக்கும் பென்ஷன் பணத்தைவிட எவ்வளவு அதிக பணம் கூடுதல் பென்ஷனாகக் கிடைக்கும் என்பது போன்ற கேள்விகளுக்கு எந்தத் தெளிவான விளக்கமும் இல்லை.

இதனால், கூடுதலாக எவ்வளவு பென்ஷன் கிடைக்கும் என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒரு கணக்கை சொல்கின்றனர். சிலர், நமது பி.எஃப் பணத்தில் இருக்கும் பணத்தை எடுத்து நமக்கே கூடுதல் பென்ஷனாகத் தரப்போவதாகச் சொல்கிறார்கள். இதனால், ஓய்வு பெற்றபிறகு நமக்குக் கிடைக்கும் பி.எஃப் பணம் குறைவாகவே இருக்கும் என்கிறார்கள். அப்படியானால், பி.எஃப் தொகை குறைவதை ஊழியர்கள் எப்படி சரிக்கட்டுவார்கள்? இன்னும் சிலர், கூடுதல் பென்ஷன் பெற கணிசமான தொகையை பி.எஃப் கணக்கில் கட்ட வேண்டும். அந்தப் பணத்தில் இருந்து கூடுதல் பென்ஷன் தரப்படும் என்கிறார்கள். ஆக, நம் பி.எஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து நமக்கே திரும்பத் தருவதுதான் கூடுதல் பென்ஷனா?

இப்படி பல கேள்விகள் இருக்க, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலைச் சொல்லி, பி.எஃப் சந்தாதாரர்கள் தெளிவான முடிவை எடுக்க உதவி செய்யாமல், கடைசி தேதியை மட்டும் தள்ளிவைத்துக்கொண்டே போவது சரியான விஷயமா? இந்தத் திட்டத்தில் இருக்கும் சாதக, பாதகங்கள் பற்றித் தெரியாமலேயே இதுவரை 16 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். இந்த விண்ணப்பங்களை எல்லாம் தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு எப்போது பரிசீலனை செய்யும், கூடுதல் பென்ஷன் எப்போது தர ஆரம்பிக்கும் என்கிற கேள்விகளுக்கும் இப்போது விடை இல்லை!

பென்ஷன் என்பது ஓய்வு பெற்ற மக்களின் அடிப்படை வாழ்வாதாரம். ஓய்வு பெற்றவர்களுக்குக் கூடுதல் பென்ஷன் தர விரும்பினால், அதைப் பற்றி நன்கு யோசித்து, விவாதித்து, முன்கூட்டியே எடுத்துச் சொல்லி, மக்கள் சரியான முடிவை எடுக்க உதவுவதுதான் தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு செய்யும் வேலையாக இருக்கும். அதை விட்டுவிட்டு, தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவதால் என்ன பயன்?

- ஆசிரியர்


மேலும் படிக்க கூடுதல் பென்ஷனில் ஏன் இத்தனை குழப்பங்கள்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top