ஒன ப ட: மககள ஏமறற ஆடசகக வநதவர ஸடலன!' - எடபபட பழனசமயன வமரசனம சரய?

0

இராஜீவ் காந்தி, மாணவரணித் தலைவர், தி.மு.க.

“ ‘கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன், ஈபிள் டவர் ஏறி ஏரோப்ளேனைப் பிடிக்கப் போனானாம்...’ அப்படித்தான் இருக்கிறது அவரின் கருத்து. கொல்லைப்புறமாகப் பதவிக்கு வந்தது யாரென்பது உலகறிந்த செய்தி. தரையில் தவழ்ந்து சென்று, சசிகலாவின் காலில் விழுந்து ஆட்சிப் பொறுப்பைப் பெற்றவர்தானே இந்த எடப்பாடி... அதை அவராலேயே மறுக்க முடியாதே. அப்படித் தன்னைப் பதவிக்குக் கொண்டுவந்த சசிகலாவுக்கு துரோகமும் செய்தவர் எடப்பாடி. ஆனால், தளபதி ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, மக்களைச் சந்தித்து முறைப்படி தேர்தலைச் சந்தித்து ஆட்சிப் பொறுப்பேற்றவர். தளபதி குறித்துப் பேச, குறுக்குவழி பழனிசாமிக்கு என்ன தார்மிகத் தகுதி இருக்கிறது... பழனிசாமியின் ஆட்சியில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பும் சிதைக்கப்பட்டது. பா.ஜ.க-வின் கைப்பாவையாக மாறியதால் மாநில உரிமைகள் பறிபோயின. ஆனால், இன்று மாநிலத்தை வளர்த்தெடுத்து, ஒன்றிய அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து தைரியமாகப் போராடிக்கொண்டிருப்பவர் முதல்வர் ஸ்டாலின். எடப்பாடி தன் அரசியல் தோல்வியை மறைத்து, இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள மேடைக்கு மேடை உளறிக்கொண்டிருக்கிறார்!”

இராஜீவ் காந்தி, கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க.

“நேர்மையான விமர்சனம். அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று செய்யவே முடியாத பொய்களைச் சொல்லி மக்களை நம்பவைத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். நகைக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து, மகளிர் உரிமைத்தொகை எனச் சொன்ன எதையாவது உருப்படியாகச் செய்திருக்கிறார்களா... `மதுக்கடைகளை மூடுவோம்’ என்று கனிமொழி பேசினார். ஆனால், தற்போது தமிழ்நாடு முழுவதும் 24 மணி நேரமும் சாராயம் ஆறாக ஓடுகிறது. சட்டவிரோத டாஸ்மாக் பார் பிரச்னை பூதாகரமானதும் பெயருக்குச் சில கடைகளை மூடியிருக்கிறார்கள். பி.டி.ஆர் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானதென்றால், அதைப் பரப்பியவர்கள்மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை... தமிழ்நாட்டில் 31 வருடங்களாக ஆட்சியிலிருந்த அ.தி.மு.க ஒருபோதும் சொத்து வரியை உயர்த்தியதே இல்லை. ஆனால், மத்திய அரசு சொல்கிறது என்று எல்லாக் கட்டணங்களையும் மனம்போன போக்கில் உயர்த்திக்கொண்டிருப்பது இவர்கள்தானே... ஊழல் செய்து கொள்ளையடிப்பதை மட்டுமே கொள்கையாக வைத்திருக்கிறார்கள். வரும் காலங்களில் ஒவ்வொரு தி.மு.க அமைச்சரும் ஊழல் வழக்கில் கைதாவதை நாம் பார்க்கத்தான் போகிறோம்!”


மேலும் படிக்க ஒன் பை டூ: `மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின்!' - எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் சரியா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top