பதசசர: கயல நலம... பல உயல..! - மவடடஙகளன பயர மறறததல சககய சர பதவளர!

0

புதுச்சேரியில் உள்ள மிகப் பழமையான கோயில்களில் பாரதி வீதியிலுள்ள காமாட்சி அம்மன் கோயிலும் ஒன்று. ரெயின்போ நகரில் இந்தக் கோயிலுக்கு சொந்தமாக 64,035 சதுர அடி நிலம் இருக்கிறது. சுமார் ரூ.12.5 கோடி மதிப்புள்ள இந்த இடத்தை கோயில் அறங்காவல் குழுவினர் கடந்த ஆண்டு பார்வையிட்டனர். அப்போது அந்த இடத்தை போலி பத்திரம் மூலம் மர்ம நபர்கள் சிலர் வீட்டு மனைகளாக மாற்றி சிலர் விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. அதையடுத்து கோயிலுக்கு சொந்தமான அந்த இடத்தை மீட்டுத் தருவதுடன், போலி பத்திரம் மூலம் அதை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோயில் அறங்காவல் குழு நிர்வாகி சுப்பிரமணியன் புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ.டி போலீஸ், எஸ்.பி மோகன்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்தது.

அந்த குழு விசாரணையில் இறங்கியதுடன், சென்னையைச் சேர்ந்த ரத்தினவேல், அவரின் மனைவி மோகனசுந்தரி, மனோகரன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி சின்னராசு (எ) பழனி, பெரியநாயகிசாமி, அவரது மகன் ஆரோக்கியதாஸ் (எ)அன்பு, ஆரோக்கிய ராஜ் பிரான்சுவா, முன்னாள் ராணுவ வீரர் மணிகண்டன், சகாயராஜ், கருணாகரன், மற்றொரு மணிகண்டன் ஆகிய 12 பேரை கைது செய்தது. இந்நிலையில் போலி உயிலின் அடிப்படையில் கோயில் நிலத்தை தனியாருக்கு பதிவு செய்ததாக அப்போதைய உழவர்கரை சார்பதிவாளரும், தற்போது வில்லியனூர் சார் பதிவாளருமான சிவசாமி என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

சார் பதிவாளர் சிக்கியது எப்படி?

கோயிலுக்கு சொந்தமான இடத்திற்கு கடந்த 1995-ம் ஆண்டில் எழுதப்பட்டது போல போலியான உயிலை தயாரித்து, அதன்மூலம் கடந்த 2021-ம் ஆண்டு இடத்தை கிரயம் செய்திருக்கின்றனர். ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த தென்னாற்காடு மாவட்டம் கடந்த 1993-ம் ஆண்டு விழுப்புரம் ராமசாமி படையாட்சி மாவட்டம், கடலூர் வள்ளலார் மாவட்டம் என இரண்டாக பிரிக்கபப்ட்டது. அதையடுத்து 1997-ம் ஆண்டுதான் இரண்டு மாவட்டங்களும் கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் என பெயர் மாற்றம் பெற்றன.

கைது செய்யப்பட்ட சார் பதிவாளர்

அதேபோல யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி கடந்த 2006-ம் ஆண்டுதான் புதுச்சேரி பெயர் மாற்றம் பெற்றது. ஆனால் 1995-ம் ஆண்டில் எழுதப்பட்டதாக சொல்லப்பட்ட உயிலில் புதுச்சேரி என்றும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் என்றும் எழுதி பத்திரத்தை பதிவு செய்திருக்கின்றனர். இதில்தான் சார் பதிவாளர் சிக்கியிருக்கிறார். தொடர்ந்து ஊழல் புகாரில் சிக்கி வந்த சார் பதிவாளர் சிவசாமிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்து சார் பதிவாளராகவே கோலோச்சி வந்த இந்த சிவசாமிதான் தற்போது கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றிருக்கிறார்.


மேலும் படிக்க புதுச்சேரி: கோயில் நிலம்... போலி உயில்..! - மாவட்டங்களின் பெயர் மாற்றத்தால் சிக்கிய சார் பதிவாளர்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top