சவரககர ஹடகவர படஙகள பளள பததகஙகளல இரநத கட - கரநடக கஙகரஸ அரச உததரவ

0

கர்நாடகா காங்கிரஸ் அரசு, பள்ளிப்பாட திட்டங்களில் பா.ஜ.க சேர்த்த, சாவர்க்கர் தொடர்பான கவிதை, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் தொடர்பான பாடம் என, பல பாடங்களை நீக்கியுள்ளனர்.

கர்நாடகத்தில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றுள்ளார். காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின், பா.ஜ.க கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டம் திரும்ப பெறுதல், பல்வேறு திட்டங்கள் டெண்டர்களை மறு பரிசீலனை செய்தல் என, பல்வேறு நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

தேர்தலின் போது பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுமெனவும், சமூக நீதி நிலைநாட்டப்படுமெனவும் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இந்த நிலையில், பள்ளிப்பாட புத்தகங்களில் பா.ஜ.க சேர்த்த, வலதுசாரி தொடர்பான பாடங்களை நீக்கி உத்தரவிட்டுள்ளதால், பா.ஜ.கவினர் அதிருப்தியில் உள்ளனர்.

கர்நாடகா பள்ளி கல்வி.

இரு நாள்களுக்கு முன்பு, கர்நாடகா பள்ளிப்பாட புத்தகங்களில் மாற்றம் கொண்டு வர கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் பின், 6 – 10ம் வகுப்பு வரையிலான கன்னடா மற்றும் சமூக அறிவியல் பாட புத்தகங்களில், 18 மாற்றங்கள் கொண்டு வர அரசு உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ.க சேர்த்தது என்னென்ன?

பா.ஜ.க ஆட்சியின் போது, பாடநூல் திருத்தக்குழுவில் இருந்த வலதுசாரி சிந்தாந்தத்தை பின்பற்றும் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழுவினர், பள்ளிப்பாடத்திட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் தொடர்பான பாடம் மற்றும் சாவர்க்கர் தொடர்பான கவிதையை சேர்த்தனர்.

ஹெட்கேவர், சாவர்க்கர்.

மேலும், நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தனது மகளுக்கு எழுதிய, ‘என் மகளுக்கு கடிதம்’ என்ற பாடத்தை நீக்கிவிட்டு, ‘Bhoo Kailasa’ என்ற பாடத்தை சேர்த்தினர்.

இந்த மாற்றங்கள் குறித்து அப்போதைய எதிர்கட்சியான காங்கிரஸ், ‘பா.ஜ.க பள்ளி மாணவர்களிடம் இந்துத்துவத்தை வளர்க்க நினைக்கிறது,’ என, கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தது.

பா.ஜ.க Vs காங்கிரஸ்.

ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் தற்போது, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவரின் ‘யார் ஒரு சிறந்த மனிதராக இருக்க வேண்டும்’ என்ற பாடத்தை நீக்கிவிட்டு, இதற்கு பதிலாக, சிவகோட்டாச்சார்யா எழுதிய ‘சுகுமார சுவாமியின் கதை’ என்ற பாடத்தை சேர்த்துள்ளது. மேலும், சாவர்க்கர் தொடர்பான கவிதைகள், ‘Bhoo Kailasa’ ஆகிய பாடங்களை நீக்கி விட்டு, நேருவின் ‘என் மகளுக்கு கடிதம்’ பாடத்தை சேர்த்துள்ளனர்.

புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்!

ஒட்டுமொத்தமாக, இந்துத்துவா பின்னணி கொண்ட, அனைத்து பாடங்களையும், வலதுசாரி எழுத்தாளர்களின் கவிதைகளையும் காங்கிரஸ் அரசு நீக்கியுள்ளது. மேலும், புதிய பாடத்திட்டங்களான, வேத கலாசாரம், புதிய மதங்களின் எழுச்சி, பெண் சுதந்திர போராட்ட வீரர்கள், பெண் சமூக சீர்திருத்தவாதிகள் உள்ளிட்ட பாடங்களை புதிதாக அறிமுகம் செய்துள்ளனர்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

‘துரதிருஷ்டவசமானது’

இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய, போக்குவரத்துத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘டாக்டர் ஹெக்டேவர், சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரின் பாடத்திட்டங்களை, கர்நாடகா அரசு அகற்றியுள்ளது துரதிருஷ்டவசமானது. இதை விட வேதனையானது எதுவுமில்லை,’’ என, தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டத்தில் மாற்றம் செய்துள்ளதை பலதரப்பினர் வரவேற்றுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக வலதுசாரி மற்றும் இந்துத்துவ பாடத்திட்டங்கள் அகற்றப்பட்டுள்ளதால், பா.ஜ.க தலைவர்கள் அதிருப்தி அடைந்து, காங்கிரஸை சாடி வருகின்றனர்.


மேலும் படிக்க சாவர்க்கர், ஹெட்கேவர் பாடங்கள், பள்ளி புத்தகங்களில் இருந்து ‘கட்’ - கர்நாடகா காங்கிரஸ் அரசு உத்தரவு
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top