ஐ.எஃப.எஸ மசட: கவலதறயன கடடண அமபலம..!

0

ஓராண்டு காலத்துக்குப் பிறகு, வேலூர் ஐ.எஃப்.எஸ் மோசடி நிறுவனம் மீதான நடவடிக்கை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகக் காவல்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவரே தற்போது கைதாகியிருப்பது அதிர்ச்சியைக் கூட்டியுள்ளது.

ஐ.எஃப்.எஸ் நிறுவன மோசடிகள் பற்றி ஆரம்பத்திலிருந்தே எச்சரித்து வரும் நாம், ‘இதில் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. அதனால்தான், ஐ.எஃப்.எஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காமல், தமிழகக் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு வேடிக்கை பார்க்கிறது’ என்பதைத் தொடர்ந்து சொல்லி வந்தோம்.

ஒருகட்டத்தில், ‘ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸ் நாட்டைவிட்டே தப்பி விட்டனர்’ என்கிற தகவல்கள் கசியவே, மத்திய அரசினுடைய அமலாக்கத்துறையின் பார்வை, இந்த விவகாரத்தில் ஆழமாகப் பதிய ஆரம்பித்தது. இதையடுத்து, கட்டாயத்தின் பேரில் வேகமாகக் களத்தில் சுழல ஆரம்பித்துள்ளது பொருளாதாரக் குற்றப்பிரிவு.

இந்தப் பின்னணியில்தான் காவல்துறையைச் சேர்ந்த ஹேமந்திர குமார் இப்போது கைதாகியுள்ளார். போலீஸாக இருந்த இவர், ஐ.எஃப்.எஸ் ஏஜென்ட் வேலையையும் செய்திருக்கிறார். ‘மோசடித் திட்டம்’ என்பது தெரிந்தும், காவல் துறை அதிகாரியாக நடவடிக்கை எடுக்கத் துணியவில்லை. மாறாக, பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் முழுநேர ஏஜென்டாகவே மாறியிருக்கிறார். வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து சுமார் 550 கோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்து, கோடிகளில் கமிஷன் பெற்றிருக்கிறார். ஐ.எஃப்.எஸ் மோசடி வெளியில் வர ஆரம்பித்து கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் முடிந்த நிலையில், மிக மிகக் காலதாமதமாகவே ஹேமந்திர குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ‘ஐ.எஃப்.எஸ் மற்றும் தமிழக காவல்துறை மேலிடங்களுக்கு இடையே புரோக்கராகவும் ஹேமந்திர குமார் செயல்பட்டிருக்கக்கூடும். அதனால் தான், ஃபிராடு பிரதர்ஸ் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லும்வரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்’ என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவற்றைப் புறம்தள்ளிவிட முடியாது என்பதற்கு, ஹேமந்திரகுமாரின் செயல்பாடுகளே சாட்சி!

ஐ.எஃப்.எஸ் மட்டுமல்ல... தமிழகத்தில் மோசடி நிதி நிறுவனங்கள் எண்ணற்று இருக்கின்றன. புதிது புதிதாக முளைக்கவும் செய்கின்றன. தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸோ... வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாகி இருப்பதுபோல, மோசடிக்காரர்கள் பலரையும் அமலாக்கத்துறை கைது செய்யும் நிலை ஏற்பட்டால், மாநில அரசுக்குதான் கெட்டபெயர்! இனியாவது, வேகம் காட்டினால் சரி!

- ஆசிரியர்


மேலும் படிக்க ஐ.எஃப்.எஸ் மோசடி: காவல்துறையின் ‘கூட்டணி’ அம்பலம்..!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top