``நாங்க பெத்தப் பிள்ளைக்கு, ஸ்டாலின் பெயர் வைக்க வர்றாரு..! - சேலத்தில் இ.பி.எஸ் பேச்சு

0

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கல்லபாளையம் பிரிவு சாலையில், எடப்பாடி நகர அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட கழகக் கொடியை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். பின்னர் பேசிய அவர், “சாதாரண தொண்டனும் ஒரு கட்சியின் உயர்மட்ட பதவிக்கு வரமுடியும் என்பதற்கு அ.தி.மு.க-வே ஒரு முன் உதாரணம். காரணம் நாங்கள் தி.மு.க-வைப்போன்று அடிமைகளுக்கான கட்சி நடத்தவில்லை. இந்த விடியா தி.மு.க-வின் இரண்டாண்டுக்கால ஆட்சியில் ஏதாவது மக்களுக்கு நல்லது நடந்துள்ளதா என்றால் ஒன்றுமே இல்லை. மக்களின் பணத்தை எவ்வாறு பதுக்குவது, வீணடிப்பது என்பதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.

நானும் பல மேடைகளின் மூலம் தமிழக முதல்வரிடம் கேட்டுவிட்டேன். அமைச்சர் பி.டி.ஆர் சொன்ன 30 ஆயிரம் கோடி எங்கே போனது என்று, ஆனால் இதுவரை தி.மு.க சார்பில் எந்தவித விளக்கமோ, பதிலோ தரவில்லை. இந்த முதல்வர் ஒரு பொம்மை முதல்வர் என்பதை அடிக்கடி நிரூபித்துவருகிறார். காரணம் இவருக்குக் கீழ் என்ன நடக்கிறது என்று தெரியாது. என்ன நடவடிக்கை எடுப்பது என்பதுகூட தெரியாமல் இருந்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி

அதன் விளைவுதான் தமிழகத்தில் ஆங்காங்கே, கொலை, கொள்ளை, போதை என்று குற்றச் சம்பவங்கள் பெருகி வருகின்றன. முதல்வர் காவல்துறை என்னும் துறையைக் கையில் வைத்திருந்தால் மட்டும் போதாது, அதனை செயல்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். மாட்டுவண்டி ஓட்டுபவன் ஒழுங்காக ஓட்டினால்தான் மாடு ஒழுங்காகச் செல்லும். குற்றத்தைத் தடுக்க வேண்டிய காவலர்களே கடைகளில் சென்று அடித்துப் பிடுங்கி திண்கிறார்கள். இதிலிருந்தே தெரிந்துகொள்ள வேண்டியதுதான் நாம் இந்த ஆட்சியின் சிறப்பை.

சேலத்திற்கு முதல்வர் வருகிறார் என்று கேள்விப்பட்டேன். எதற்கு வருகிறார் அவர், சேலத்திற்காக எதாவது திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளாரா என்றால், ஒன்றுமே இல்லை. நாங்கள் எங்களது ஆட்சியில் கட்டத் தொடங்கிய பாலத்தையும், பஸ் ஸ்டாண்டையும் திறந்து வைக்க வருகிறார். இது எப்படி இருக்கிறது என்றால், நாங்க பெத்த புள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைப்பதா...

எங்களது ஆட்சியிலாவது மக்களுக்கான திட்டங்கள் அத்தனை ஏற்படுத்தியிருந்தோம். ஆனால் இந்த ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களைத் தவிர்த்துவிட்டு, தங்கள் குடும்பத்துக்கான திட்டத்தை மட்டும்தான் வகுத்து வருகிறார்கள்.

எழுதாத பேனாவுக்கு எதற்கு சிலை அமைக்க வேண்டும். இதெல்லாம் யாருடைய பணம், முதல்வருடையதா அல்லது முதல்வரின் குடும்பத்தினருடையதா... மக்களின் வரிப்பணத்தில் செய்ய எப்படி முதல்வருக்கு தைரியம் வந்தது.

இன்று லோக்கல் சரக்கு உருவானதற்கு தி.மு.க-தான் காரணம். ஒரு குவாட்டர் பாட்டில் வாங்கினால்கூட அதற்கு கூடுதலாக 10 ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளது. அப்புறம் குடிமகன்கள் என்ன செய்வார்கள்... அவர்களே காய்ச்சிக் குடிச்சுக்கலாம், இல்லன்னா காய்ச்சுரவங்ககிட்ட போய் குடிச்சுகலாம்னுதான் நினைப்பாங்க. தமிழ்நாட்டில் மட்டும் 6 ஆயிரம் பிராந்தி கடைகள் இருக்கு. 5,008 பார்கள் இருக்கு. இதில் 4,000 பார்கள் அனுமதியே இல்லாத பார்கள். ஏன் இதெல்லாம் முதல்வர் கண்ணுக்குத் தெரியலையா.

இந்தக் கேள்விய எதிர்க்கட்சியா இருந்து நாங்க கேட்க ஆரம்பித்தபோதுதான், சும்மா கண் துடைப்பு வேலைக்காக சேலத்தில் 27 பார்கள் மூடியுள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர்” என்றார்.


மேலும் படிக்க ``நாங்க பெத்தப் பிள்ளைக்கு, ஸ்டாலின் பெயர் வைக்க வர்றாரு..! - சேலத்தில் இ.பி.எஸ் பேச்சு
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top