நமககல: லஞச ஒழபபததற சதன; எஸ.ஐ வடடல சககய ஆவணஙகள?!

0

நாமக்கல் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூபதி. இவர், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ராசிபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, ராசிபுரம் பச்சுடையாம்பாளையத்தைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் ஜெயராஜன் என்பவர் மோசடி புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், 'ராசிபுரத்தை சேர்ந்த ஆல்ட்ரின் போஸ்கோ என்கிற ஜெயக்குமார் என்பவர் தனது இரு மகன்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். மேலும் அவர் வெவ்வெறு காரணங்களுக்காக எனது நிதி நிறுவனத்தில் ரூ.13 லட்சம் கடன் பெற்று செலுத்தவில்லை' என தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக, உதவி ஆய்வாளர் பூபதி விசாரணை நடத்தினார்.

சோதனை நடந்த பூபதி வீடு

அப்போது, வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஜெயராஜனிடம் இரு தவணைகளில் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும், அவர் மோசடி புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், கஞ்சா வியாபாரிகளிடமும் பல லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்று, அவர்களுக்கு அடைக்கலம் தந்ததாகவும் இவர்மீது அதிரடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இப்படி, நாமக்கல் மாவட்டத்தில் இவர் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் இவர்மீது, தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு வந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். அதோடு, உதவி ஆய்வாளர் பூபதி மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, நாமக்கல் திருநகரில் உள்ள பூபதியின் வீடு, நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தங்கும் விடுதி மற்றும் திருச்செங்கோடு அருகே இருக்கும் மல்லசமுத்திரத்தில் உள்ள பூபதியின் பெற்றோர் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள பூபதியின் மாமனார் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தனித்தனி குழுவாக சோதனையில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த சோதனையில், பூபதி வீட்டில் இருந்த கணக்கில் வராத ரொக்கம் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியதாகச் சொல்லப்படுகிறது.

மரக்கன்று நடும் எஸ்.ஐ பூபதி

இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதோடு, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, பூபதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் பணியில் இருக்கும் ஒரு உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்துவதும், நடவடிக்கை எடுப்பதும் இதுவே முதல்முறை என்று சொல்லப்படுகிறது. உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தியிருப்பது, நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது.


மேலும் படிக்க நாமக்கல்: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; எஸ்.ஐ வீட்டில் சிக்கிய ஆவணங்கள்?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top