ஓர் உண்மை: பெட்ரோல்/டீசலைவிட எலெக்ட்ரிக்கில்தான் எமிஷன் அதிகம்! வனவிலங்குகளுக்கும் EV எதிரியா?

0
‘தடதட’வென நாராசச் சத்தத்துடன், ‘ஃப்ரெண்ட்ஸ்’ வடிவேலு மாதிரி நம் மூஞ்சிகளில் கறும்புகை அடித்துச் செல்லும் வாகனங்களுக்கு மத்தியில், சத்தமே இல்லாமல், எக்ஸாஸ்ட்டே இல்லாமல் போகும் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பார்த்தால் பெரிய கும்பிடு போடத் தோன்றும்.

இதற்குக் காரணம் – எலெக்ட்ரிக் வாகனங்கள் சத்தம் போடாது; இரண்டாவது – இவி–க்களில் புகையே வராது. அட, எக்ஸாஸ்ட் பைப் என்று சொல்லக்கூடிய சைலன்சரே இருக்காது. 

‘அட, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இதைவிட வேறென்னய்யா வேணும்’ என்று நாம் காலர் தூக்கிவிடும் வேளையில் – ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளாக வேண்டும். அந்த உண்மை இதுதான்: ‘பெட்ரோல் டீசலில் ஓடும் வாகனங்களைவிட எலெக்ட்ரிக்கில் ஓடும் வாகனங்களால்தான் சுற்றுச்சூழலுக்குப் பெரிய ஆபத்து!’

இது கொஞ்சம் வியக்கத்தக்க உண்மை. இது காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்தாலும், கான்பூரில் உள்ள IIT (Indian Institute of Technology)–யின் மூலம் லேட்டஸ்ட்டாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இந்த உண்மை நச்செனக் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஸ்டடி ரிப்போர்ட் இப்படிச் சொல்கிறது: ‘‘ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி வாகனங்களை ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் கார்கள் நாம் நினைப்பதுபோல், எக்கோ ஃப்ரெண்ட்லியான கார்கள் இல்லை!’’

ஒரு ஜப்பானிய நிறுவனத்துடன், இந்த IIT கான்பூர் இணைந்து எலெக்ட்ரிக், ஹைபிரிட் மற்றும் ICE (Internal Combustion Engine) வாகனங்களைப் பற்றிய ஒரு படிப்பு ஆய்வு நடத்தியது. இதில் LCA (Life Cycle Analysis) மற்றும் TCO (Total Cost of Ownership) … அதாவது – எந்த வாகனங்களுக்கு ஆயுள் அதிகம் மற்றும் பணச்சேமிப்புக்கு எது உகந்தது - இதைக் கண்டறியும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இந்த உண்மையைச் சொல்லியிருக்கிறார்கள். 

Electric Vehicle Charging
வளவன் அமுதன், எலெக்ட்ரிக் பொதுப் போக்குவரத்து நிபுணர்

இந்தப் படிப்பாராய்ச்சியின்படி, எலெக்ட்ரிக் கார்கள், ஒரு சாதாரண ICE வாகனத்தைவிட (பெட்ரோல்/டீசல் வாகனம்) சுமார் 15 – 50% எமிஷனைத் தன் வாழ்நாளில் வெளியிடுகிறதாம். இதை GHC (GreenHouse Gas Emissions) என்று சொல்வார்கள். உற்பத்தி, பயன்பாடு, ஸ்க்ராப்பேஜ் என்று எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும். கூடவே, COP (Cost of Purchasing), இன்ஷூரன்ஸ், பராமரிப்பு, ரன்னிங் காஸ்ட் போன்றவற்றிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் 15 – 60% அதிகமாக இருக்கிறதாம் சாதா ICE வாகனங்களைவிட! 

‘இது உண்மையா?’ என்று நம் ஊர் பன்னாட்டு எலெக்ட்ரிக் எக்ஸ்பெர்ட் மற்றும் பொதுப்போக்குவரத்தில் நிபுணராக இருந்து வரும் வளவன் அமுதனிடம் விசாரித்தோம்!

‘‘உண்மைதான்; நாம் நினைப்பதுபோல் எலெக்ட்ரிக் வாகனங்கள், ICE வாகனங்களை ஒப்பிடும்போது நல்ல எக்கோ ஃப்ரெண்ட்லி கார் கிடையாது. பொதுவாக, நாம் வாகனம் ஓடும்போது வெளியிடப்படும் நச்சுப்புகையை மட்டும் கணக்கிடுகிறோம். TPE (Tailpipe Emission)படி… அதாவது, எக்ஸாஸ்ட் புகையை மட்டும் வைத்துக் கணக்கிட்டால், ICE வாகனங்கள் புகையை உமிழ்வது உண்மைதான். ஆனால், அந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க நாம் எவ்வளவு நச்சுப்புகையை வெளியிடுகிறோம் தெரியுமா?

இதைத்தான் GHC (GreenHouse Gas Emissions) என்கிறோம். அதென்ன GHC? 

EV related to Nature

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எது முக்கியம்? லித்தியம் அயன் பேட்டரி! அந்த Li பேட்டரிக்கு முக்கியமான 3 மூலப்பொருட்கள் – லித்தியம், கோபால்ட், மாங்கனீசு (Lithium, Cobalt, Manganese). ஒரு எலெக்ட்ரிக் வாகனத்துக்குப் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரியில் சுமார் 8 கிலோ லித்தியம், 14 கிலோ கோபால்ட் மற்றும் 20 கிலோ மாங்கனீசு இருக்கும். இவை தயாரிப்பதற்கு நீர் மற்றும் மண்வளம் நாம் நினைப்பதைவிட அதிகமான அளவில் மாசுபடும் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இது மண் அரிப்பையும் ஏற்படுத்தி, வனவிலங்குகளின் வாழ்வாதாரத்தையும் காலி செய்யும் என்பதும் உண்மை.

இது தவிர, நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் மின்சாரம் இருக்கிறதே! அதிலும் ஏகப்பட்ட GHC வெளியாகிறது. மேலும், Grid India வழங்கும் தகவலின்படி, இந்தியாவில் EV-க்களுக்குத் தேவையான மின்சாரம், அதிகளவில் பெட்ரோலிய மூலப்பொருட்களில் இருந்து (குறிப்பாக, 73.09% லிக்னைட்டை மூலப்பொருளாகக் கொண்டு)தான் உற்பத்தி செய்யப்படுகிறது. 

Neyveli Lignite Corporation

நிலக்கரிச் சுரங்கங்களின் மாசு பற்றி உங்களுக்குத் தெரியும். ஒரு புள்ளி விவரம்: இந்தியா  கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதில், உலகின் மூன்றாவது பெரிய நாடாக மாறியுள்ளது. அதாவது, ஆண்டுக்கு 3.9 பில்லியன் மெட்ரிக் டன் (3.9 billion metric tons CO2) சமமான (GtCO₂e) என்ற அளவில் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளை (GHGs) வெளியிடுகிறது!’’ என்கிறார் வளவன் அமுதன்.

‘அப்போ என்னதான் தீர்வு’ என்றால், இந்த கான்பூர் IIT ஆய்வில், அதற்கு ஒரு வழி சொல்லியிருக்கிறார்கள். அதாவது, ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் இதற்கு நல்ல தீர்வு என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால், அதற்கும் அரசாங்கத்துக்கு எதிராக – வரி, திரை, கிஸ்தி என்று ‘கட்டபொம்மன்’போல் நாம் குஸ்தி போட்டாக வேண்டும்!


மேலும் படிக்க ஓர் உண்மை: பெட்ரோல்/டீசலைவிட எலெக்ட்ரிக்கில்தான் எமிஷன் அதிகம்! வனவிலங்குகளுக்கும் EV எதிரியா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top