Senthil Balaji : சநதல பலஜ கத? - மரததவமனயல அனமத கவநத அமசசரகள... அடதத எனன?

0

``அரசமைப்புக்கு எதிரான கைது நடவடிக்கை!" - வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை செய்வதற்காக அமலாக்கத்துறையிலிருந்து வந்திருந்தார்கள். அப்படி வந்தவர்கள் இன்று காலை ஏறக்குறைய 2:15 மணியளவில் எந்தவிதக் காரணமும் இன்றி, கைதா என்றுகூட சொல்லாமல், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டிருக்கிறாரா அல்லது என்ன விஷயம்என்றுகூட அவருடைய உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்திய குடிமகன் யாரையும் கைதுசெய்வதற்கு இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சில வழிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அவை எதுவுமே இந்தக் கைது நடவடிக்கையில் பின்பற்றப்படவில்லை. அதேபோல கைதென்றால் முன்னதாகவே நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவுமே அவர்கள் செய்யவில்லை. எனவே, இந்த நடவடிக்கை அரசமைப்புக்கும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் எதிரான நடவடிக்கை" என்றார்.

செந்தில் பாலாஜி கைது? - மருத்துவமனையில் அனுமதி, குவிந்த அமைச்சர்கள்... அடுத்து என்ன?

தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை அரசு இல்லம், கரூர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். சுமார் 17 மணி நேரம் இந்தச் சோதனை தொடர்ந்து நிலையில், இன்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்து, மேலதிக விசாரணைக்காக அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டதாகத் தெரிகிறது.

செந்தில் பாலாஜி

அப்போது காரில் சென்றுகொண்டிருக்கும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து உடனடியாக அவரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி, எ.வ.வேலு உள்ளிட்டோர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஓமந்தூரார் மருத்துவமனைக்கு விரைந்திருக்கின்றனர்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது


மேலும் படிக்க Senthil Balaji : செந்தில் பாலாஜி கைது? - மருத்துவமனையில் அனுமதி, குவிந்த அமைச்சர்கள்... அடுத்து என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top