பதசசர: கயல நலதத வளதத ர.100 கடகக வறபன! சபஐ தலமகக அதமக பகர

0

புதுச்சேரி மாநில அ.தி.மு.க துணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வையாபுரி மணிகண்டன், டெல்லி சி.பி.ஐ இயக்குநருக்கு மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், ``புதுச்சேரி மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் சொத்துகள், கோயில் சொத்துகள் மற்றும் ஆதரவற்ற ஏழை மக்களின் சொத்துகள் அனைத்தையும் போலி பத்திரங்களைத் தயாரித்து கொள்ளையடித்து வருகிறார்கள். புதுச்சேரியில் பிரசித்திப் பெற்ற காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்துக்கு விற்று, பின்னர் அதை பலருக்கும் வீட்டு மனை பட்டாக்களாக மாற்றி பத்திரப்பதிவு செய்திருக்கின்றனர். இதில் சார் பதிவாளர் உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இதில் முக்கிய குற்றவாளிகளான அப்போதைய பதிவாளர், தாசில்தார் உட்பட பலர் தலைமறைவாகியிருக்கின்றனர். நிலத்தை விற்றவர்களை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

புதுச்சேரி அ.தி.மு.க துணைச் செயலாளர் வையாபுரி மணிகண்டன்

இதன் பின்னணியில் ஆளுங்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவருக்குத் தொடர்பு இருக்கிறது. அவர் சட்டசபையில் தன்மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தருவதாக வாக்குமூலம் அளித்தார். தற்போது அவரின் குற்றம் நிரூபணமாகியிருக்கிறது. அதேபோல வில்லியனுரில் மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை பொதுப்பாதையாகக் காட்டி, சுமார் 500-க்கும் மேற்பட்ட மனைகளை ரூ.100 கோடிக்கு மேல் விற்றுள்ளனர். இதிலும் ஆளுங்கட்சியில் முக்கிய பதவியில் இருப்பவர்களுக்குத் தொடர்பிருக்கிறது. தற்போது மணக்குள விநாயகர் கோயில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தாலும், கோயில் நிலத்தை பொதுப்பாதையாக ஏமாற்றி விற்றிருக்கின்றனர். மனைகளை வாங்கிய 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதையின்றி கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.

எனவே கோயில் நிலத்தை பொது பாதையாகக் காண்பித்து மக்களை ஏமாற்றி, மோசடி செய்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வில்லியனூர், கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயப் பெண்மணி தவமணியின் நிலத்தை, புதுச்சேரி உப்பளம் தொகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் அரசியல்வாதியும், அவரின் குடும்பத்தினரும் அபகரிப்பு செய்திருக்கின்றனர். இந்த நிலத்தை மீட்டுத்தரும்படி புதுச்சேரி சட்டசபை வளாகத்தில், முதலமைச்சர் முன்பு தவமணியின் குடும்பத்தினர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைசெய்ய முயன்றனர். இந்த நில அபகரிப்பு தொடர்பான குற்றவாளிகள்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள்மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நில அபகரிப்பு மோசடிகளில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளதால், நில அளவைத்துறையில் இரண்டு ஆண்டுகள் பட்டா பெயர் மாற்றம் செய்த பதிவுகள் கணிணியிலிருந்து மாயமாகியிருக்கின்றன. புதுச்சேரி அரசியல்வாதிகளின் அழுத்தத்துக்கு அடிபணியாமல், ஆட்சியாளர்களின் மோசடிகளுக்குத் துணை செல்லாமல் வழக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்றால், சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ விசாரணை நடத்தினால்தான் உண்மையான தகவல்கள் முழுமையாக வெளிவரும். புதுச்சேரியில் நிலவும் இந்த நில அபகரிப்பு மோசடி புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


மேலும் படிக்க புதுச்சேரி: ``கோயில் நிலத்தை வளைத்து ரூ.100 கோடிக்கு விற்பனை!” – சிபிஐ தலைமைக்கு அதிமுக புகார்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top