வருமான வரி கணக்கு தாக்கல்.... 31-ம் தேதிக்குள் செய்யாவிட்டால்..?

0

இந்த மாதத்தின் கடைசி நாளான 31-ம் தேதிக்குள் அனைவரும் தங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தாக வேண்டும். இதைச் செய்யாவிட்டால், ரூ.5,000 அபராதம் அல்லது ஏழு ஆண்டுகள் சிறை என்கிற நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்!

நாட்டின் குடிமகன்கள் அனைவரும் தாங்கள் ஈட்டிய வருமானத்துக்குரிய வரியைக் கட்டியாக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மக்கள் தரும் வரிப் பணத்தைக் கொண்டுதான் அரசாங்கங்கள் பல்வேறு நலத் திட்டங்களை வெற்றிகரமாக நடத்துகின்றன. இத்தனை முக்கியமான வேலையைக் கடைசி நாள் வரை ஒத்திவைப்பது சரியல்ல. காரணம், கடைசி நேரத்தில் பலரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முற்பட்டால், வருமான வரித் துறையின் இணையதளம் முடங்க வாய்ப்புண்டு. அதனால் கடைசி தேதிக்குள் வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாமலே போய், தேவை இல்லாமல் ரூ.5,000 வரை அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படலாம்!

இது ஒரு பக்கம் இருக்க, கடந்த நிதி ஆண்டில் வருமான வரியை சரியாகத் திட்டமிடாமல் போனதன் விளைவாக வருமான வரிச் சலுகைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில், அதிகமான வரியைப் பலரும் கட்டியிருக்கலாம். இது மாதிரியானவர்கள் இந்த நிதி ஆண்டுக்கான வரித் திட்டமிடலை இப்போதே செய்து, அதைச் சரியாக செயல்படுத்தத் தொடங்கலாம்.

பொதுவாக, வரிதாரர்கள் தங்களுக்குத் தெரிந்த வகையில் வரித் திட்டமிடலை செய்கிறார்கள். வருமான வரி தாக்கல் செய்யும் பழைய முறையாக இருந்தாலும் சரி, புதிய முறையாக இருந்தாலும் சரி, இதில் தனக்குப் பொருத்தமானது எது, எவற்றுக்கெல்லாம் வரிச் சலுகை உண்டு, எவற்றுக்கெல்லாம் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதன்படி வரித் திட்டமிடல் செய்வது அவசியம். இதைச் செய்ய இதற்கென இருக்கும் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். இந்த ஆலோசனைக்காக சில ஆயிரம் ரூபாயைத் தரத் தயங்கக் கூடாது. இதன் மூலம் பல ஆயிரங்களை மிச்சப்படுத்த முடியும் என்பது நிச்சயம்!

அடுத்து, நாட்டில் 140 கோடி பேர் இருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் ஓரளவுக்கு வசதி வாய்ப்புகளுடன்தான் வாழ்கிறார்கள். ஆனால், மொத்தத்தில் வெறும் 3 சதவிகிதம் பேர்தான் வருமான வரி செலுத்துபவராக இருக்கிறார்கள். மாறாக, வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் கொண்ட அனைவருமே வரி செலுத்த முன் வர வேண்டும். அப்படி செய்தால், மக்களுக்கான நலத் திட்டங்களை இன்னும் சிறப்பாக அரசாங்கத்தால் செய்ய முடியும்.

அதேபோல, பணத்தை ரொக்கமாக வாங்குவதையும் கடுமையான கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் கணக்கில் கொண்டுவராமல், கறுப்புப் பணமாக்க நினைப்பவர்களைக் கட்டுப்படுத்தி, வரி வருவாயைக் கணிசமாகக் கூட்ட முடியும். வருமான வரியின் பலன் அனைவருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவும் முடியும்!

- ஆசிரியர்


மேலும் படிக்க வருமான வரி கணக்கு தாக்கல்.... 31-ம் தேதிக்குள் செய்யாவிட்டால்..?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top