அறிகுறியற்ற ரத்தச்சர்க்கரை குறைவு... குழந்தைகளையும் பாதிக்குமா? பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 31

0

‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.

மருத்துவர் மு. ஜெயராஜ்

கடந்த அத்தியாயத்தில், ரத்தச் சர்க்கரை குறைவு அபாயம் உள்ள பச்சிளங்குழந்தைகளில் எவ்வாறு ரத்தச் சர்க்கரை குறைவு (Hypoglycemia) ஏற்படுகிறது என்பதை விரிவாகக் கண்டோம். இந்த அத்தியாயத்தில், அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து விரிவாகக் காண்போம்.

அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவிற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள்:

29-வது அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல் ரத்தச் சர்க்கரை குறைவு அபாயம் ஏற்படும் பச்சிளங்குழந்தைகளில், பிறந்ததில் இருந்து 2, 6, 12, 24, 48 மற்றும் 72 மணி நேரத்தில் ரத்தச் சர்க்கரை அளவினை (ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனை) கண்டறிய வேண்டும். இவ்வாறு, ரத்தச் சர்க்கரை குறைவு அபாயமுள்ள பச்சிளங்குழந்தைகளில் செய்யப்படும் ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனை மூலம், எவ்வித அறிகுறிகளும் தென்படுவதற்கு முன்னால் ரத்தச் சர்க்கரை குறைவு கண்டறியப்பட்டால், அதனை அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவு என்கிறோம்.

குளுக்கோஸ் மானி/ குளுக்கோமீட்டர் (Glucometer) மூலம் இவ்வாறு செய்யப்படும் ஸ்கிரீனிங் குளுக்கோஸ் பரிசோதனையில், அறிகுறியற்ற ரத்தச் சர்க்கரை குறைவு கண்டறியப்படும்போது, ரத்தச் சர்க்கரை அளவு 20-40 mg/dL எனில், உடனடியாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

குழந்தையால் சரிவர தாய்ப்பாலை சப்பிக் குடிக்க முடியவில்லையென்றால், விரல்களால் தாய்ப்பலைப் பீய்ச்சி (expressed breast milk), பாலாடையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். ஒருவேளை, போதுமான அளவு தாய்ப்பால் வரவில்லையென்றால், பாலாடையில் பவுடர் பாலை அளிக்கலாம்.

அதன்பிறகு, ஒரு மணி நேரம் கழித்து, குழந்தையின் ரத்தச் சர்க்கரை அளவை கண்டறிய வேண்டும். மீண்டும் பார்க்கப்பட்ட ரத்தச் சர்க்கரை அளவு 40 mg/dL-க்கு மேலென்றால், அதன்பிறகு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், மற்றும் அடுத்த 48 மணிநேரத்திற்கு, 6 மணிநேரத்திற்கு ஒரு முறையென ரத்தச் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். மாறாக மீண்டும் கண்டறியப்பட்ட ரத்தச் சர்க்கரையின் அளவு 40 mg/dL-க்கு கீழ் என்றால், ரத்த நாளத்தின் வழியாக குளுக்கோஸ் (IV Dextrose)-ஐ மருத்துவர் தொடங்குவார்.

மாறாக, முதன்முதலில் கண்டறியப்பட்ட ரத்தச் சர்க்கரையின் அளவு 20 mg/dL-க்கு கீழ் இருந்தால், நேரடியாக ரத்த நாளத்தின் வழியாக குளுக்கோஸ் கொடுக்கத் தொடங்குவோம். அதன் பிறகு, 30 நிமிடங்கள் கழித்து, மீண்டும் ரத்தச் சர்க்கரையின் அளவு கண்டறியப்படும்; சரியாக இருக்கும்பட்சத்தில், 6 மணிநேரத்திற்கு ஒருமுறையென ரத்தச் சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்.

தாய்ப்பால் - பச்சிளம் குழந்தை பராமரிப்பு

மீண்டும் சரிபார்க்கப்பட்ட ரத்தச் சர்க்கரை அளவுகள் சரியாக இருக்கிறதென்றால், 24 மணிநேரத்திற்குப் பிறகு 6 மணிநேரத்திற்கு ஒருமுறையென ரத்த நாளத்தின் வழியாக கொடுக்கப்படும் குளுக்கோஸின் அளவு குறைக்கப்பட்டு, பின்பு முழுவதுமாக நிறுத்தப்படும். 2 மணிநேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கிடைப்பதை உறுதி செய்வது மிக முக்கியமாகும்.

வரும் அத்தியாயத்தில், பச்சிளம் குழந்தைகளுக்கு, அறிகுறியுடன் கூடிய ரத்தச் சர்க்கரை குறைவிற்கான சிகிச்சை முறைகள் பற்றி பார்க்கலாம்.

பராமரிப்போம்...


மேலும் படிக்க அறிகுறியற்ற ரத்தச்சர்க்கரை குறைவு... குழந்தைகளையும் பாதிக்குமா? பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 31
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top