வஙகவயல வவகரம; டஎனஏ பரசதனகக 8 பர மணடம மறபப; ஒததவககபபடட வழகக வசரண!

0

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியல் சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, 150-க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். இதில், 13 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளைச் சேகரித்து தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையேதான், வேங்கைவயல் பகுதியிலிருந்து முதலில் டி.என்.ஏ பரிசோதனைக்கு ஆஜராகக் கோரி சி.பி.சி.ஐ.டி போலீஸார் 8 பேருக்கு சம்மன் அனுப்பிய நிலையில், 8 பேரும் சோதனைக்கு ஆஜராக விருப்பமில்லை என்று மறுப்பு தெரிவித்ததோடு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி இளங்கோகவன், ``யார், யாரை எதற்கு டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற விவரத்தை சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரி கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமளிக்க வாய்ப்பளித்து கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கூறி, வழக்கை முடித்து வைத்தார். இந்த நிலையில், மீண்டும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் அந்த 8 பேருக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய அனுமதி கேட்டு, புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, மனுமீதான விசாரணைக்கு 8 பேரும் ஆஜராகினர். அப்போது, டி.என்.ஏ பரிசோதனை தொடர்பான சம்மனை 8 பேருக்கும் நீதிமன்றம் வழங்கியது.

இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால், விளக்கம் அளிக்கலாம் என்று நீதிபதி கூறியிருந்தார். இந்த நிலையில்தான், மீண்டும் 1-ம் தேதி இது தொடர்பாக விளக்கமளிக்க ஆஜராகினர். சி.பி.சி.ஐ.டி போலீஸார் தரப்பில் விசாரணை அதிகாரி பால்பாண்டி ஆஜராகினார். அப்போது, அவர், "இந்த வழக்கினை அறிவியல்பூர்வமாக அணுகியிருக்கிறோம். டி.என்.ஏ பரிசோதனை இந்த வழக்கின் முக்கியமான ஒன்று. ஏற்கெனவே, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொண்டிருக்கிறோம். இன்னும் சிலரிடமும் மேற்கொள்ள இருக்கிறோம். இந்த 8 பேரிடமும் மாதிரிகள் எடுக்கப்பட வேண்டும். இதில், அவர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை" என்று விளக்கமளித்தார்.

டி.என்.ஏ பரிசோதனைக்கு மறுத்த 8 பேரிடமும் நீதிபதி தனித்தனியாக விளக்கம் கேட்டார். 8 பேரும், "குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல், பாதிக்கப்பட்ட எங்களையே, பரிசோதனை என்ற பெயரில் இந்த வழக்கில் சிக்க வைக்க முயல்கின்றனர். இந்த டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதில் எங்களுக்கு விருப்பமில்லை" என்று ஒரே மாதிரி விளக்கம் கொடுத்தனர். இதனைக் கேட்டறிந்த நீதிபதி இந்த வழக்கு விசாரணையை ஜூலை 4-ம் தேதி ஒத்தி வைத்திருக்கிறார்.


மேலும் படிக்க வேங்கைவயல் விவகாரம்; டிஎன்ஏ பரிசோதனைக்கு, 8 பேர் மீண்டும் மறுப்பு; ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top