சொத்து பிரச்னை; கூலிப்படை மூலம் தாய்மாமாவைக் கடத்த முயன்ற திமுக நிர்வாகி... போலீஸ் விசாரணை!

0

விருதுநகர் மாவட்டம், நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், தி.மு‌.க மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராக உள்ளார். இவருடைய தாய்மாமா ராஜகோபால் (வயது 74), ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் அருகே நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராஜகோபால் குடும்பத்துக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகளை சட்டவிரோதமாக ஜெயபிரகாஷ் அபகரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த ராஜகோபால், தன்னுடைய மகள் ரேவதி மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது, ஜெயபிரகாஷ் அபகரிக்க முயன்ற சொத்துக்கு 13 பேர் வாரிசுகளாக இருப்பதாக கோர்ட்டில் ராஜகோபால் தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ், தன்னுடைய தம்பி பாலாஜி மற்றும் மேலும் சில அடியாட்களுடன், தாய்மாமா ராஜகோபாலின் கடைக்குள் புகுந்து அவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இதைத் தொடர்ந்து அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றபோது அவர்களின் பிடியிலிருந்து தப்பிய ராஜகோபால், அருகேயுள்ள காவல் நிலையத்துக்குள் புகுந்து தஞ்சமடைந்திருக்கிறார். இதையடுத்து விஷயம் போலீஸாருக்குத் தெரியவரவும், தி.மு.க நிர்வாகி ஜெயபிரகாஷ், அவரின் தம்பி பாலாஜி மற்றும் உடன்வந்த நபர்களையும் எச்சரித்து போலீஸார் அனுப்பினர்.

சிசிடிவி
ராஜகோபால்

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக, ராஜகோபால் அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிவுசெய்த போலீஸார் சிசிடி‌வி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா பாணியில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் முதியவரைத் தாக்கி காரில் கடத்தமுயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் படிக்க சொத்து பிரச்னை; கூலிப்படை மூலம் தாய்மாமாவைக் கடத்த முயன்ற திமுக நிர்வாகி... போலீஸ் விசாரணை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top