புதுவை: "கோயில் நில அபகரிப்பில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ-க்களைக் கைதுசெய்ய வேண்டும்!”- ஜி.ராமகிருஷ்ணன்

0

புதுவை மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காமாட்சியம்மன் கோயில் நில அபகரிப்பு வழக்கில் குற்றவாளிகள்மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்த அந்த ஊர்வலத்தில், மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கலெக்டர் வல்லவனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன், பெருமாள், புதுவை கோ.சுகுமாறன்

அந்த மனுவில், `கோயில் நில மோசடியில் தொடர்புடைய எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட அனைவர்மீதும் உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசடியில் தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகளைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டும். 2011 முதல் பதிவுத்துறையில் நடந்துள்ள மோசடிகள், அரசு புறம்போக்கு நிலம் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கோயில் சிலைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மின்னணு முறையில் ஆவணப்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் வெளியிட வேண்டும். வீடு, நிலம், சொத்து அபகரிப்பை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். குற்றவாளிகள்மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன், ``காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 64,000 சதுர அடி நிலத்தை போலி பத்திரம் மூலம் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் ஜான்குமார், அவரின் மகன் ரிச்சர்டு ஆகியோர் மோசடி செய்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவுசெய்த பின் இரண்டு ஆண்டுகளின் ஆவணங்கள் பதிவேடுகள் துறையில் அழிக்கப்பட்டுள்ளன. நிலமோசடி வழக்கில் இரண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களையும், இதில் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரையும் கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டும். புதுவையில் நீண்டகாலமாக தனியார் நிலங்கள், கோயில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நில மோசடிகள் தொடர்பாக அரசு விசாரணைக்குழு அமைக்க வேண்டும். பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளை சீர்குலைக்க மத்திய அரசு கவர்னர்களை நியமித்து அரசியல் செய்கிறது. கவர்னர்கள் அரசியல் பேசுவதை ஏற்க முடியாது.

ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்

காய்கறி விலை உயர்ந்து வருவதில் அரசு தலையிட்டு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நியாய விலையில் காய்கறி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல புதுவை அரசும் நியாயமான விலையில் காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில கவர்னர் அரசு நிர்வாகத்தில் தலையிடக் கூடாது. எதிர்க்கட்சித் தலைவர்போல நாள்தோறும் அரசு திட்டங்களையும், அரசையும் விமர்சனம் செய்யக் கூடாது. முதலமைச்சர் ஸ்டாலின் மூலதனத்தை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்கிறார். ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்றால் மூலதனம் வந்துவிடுமா என கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்புகிறார். அரசியல்வாதிபோல கவர்னர் பிரசாரம் செய்ய அதிகாரம் கிடையாது. எனவே தமிழக கவர்னரை ஜனாதிபதி திரும்பப் பெற வேண்டும்” என்றார்.


மேலும் படிக்க புதுவை: "கோயில் நில அபகரிப்பில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ-க்களைக் கைதுசெய்ய வேண்டும்!”- ஜி.ராமகிருஷ்ணன்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top