அணணமல கடடததல ஏறபடட சலசலபப; கடச பதவய ரஜனம சயத கவனசலர- கமர பஜகவல அதகளம

0

நாகர்கோவில் நாகராஜா திடலில் பா.ஜ.க சார்பில் கடந்த இரண்டாம் தேதி நடந்த `குமரி சங்கமம்' என்ற மத்திய அரசின் ஒன்பதாண்டுக்கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். நாகராஜா திடலின் கடைசிப் பகுதியில் இருந்தவர்களுக்கு அண்ணாமலை பேசியது கேட்கவில்லை என புகார் எழுந்தது. உடனே போடியத்தில் இருந்த மைக் மாற்றி வேறு மைக் பொருத்தப்பட்டது. ஆனாலும், அந்த நிகழ்ச்சியில் கடைசிவரை ஒலிபெருக்கி சரியில்லாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், நாகர்கோவில் மாநகராட்சி பா.ஜ.க கவுன்சிலர்களுக்கு அண்ணாமலை நிகழ்ச்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற புதிய புகார் எழுந்திருக்கிறது. நிகழ்ச்சி நடந்த நாகராஜா திடல் பகுதி 24-வது வார்டில் வருகிறது. 24-வது வார்டு பா.ஜ.க கவுன்சிலரான ரோஸிட்டா கிழக்கு மண்டல மகளிர் அணி துணைத் தலைவராகவும் உள்ளார். ரோஸிட்டாவின் கணவர் திருமால், அதே கிழக்கு மண்டலத்தின் பொருளாளராக உள்ளார். இவர்கள் ஏற்பாட்டில் அண்ணாமலைக்கு அணிவிக்க ஆளுயர மாலை, மலர் கிரீடம், மலரில் செய்யப்பட்ட செங்கோல் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் அண்ணாமலைக்கு ஆளுயர மாலை அணிவிக்க அனுமதி இல்லை எனக் கூறி மறுத்திருக்கிறார்கள்.

அண்ணாமலைக்கு வாங்கிய மாலை காமராஜருக்கு அணிவிக்கப்பட்டது

மேலும், நிகழ்ச்சி நடக்கும் வார்டு கவுன்சிலரான ரோஸிட்டாவை மேடைக்கு அனுமதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ரோஸிட்டா, திருமால் ஆகியோர் அண்ணாமலைக்கு வாங்கி வைத்திருந்த ஆளுயர மலர் மாலையை, சில பா.ஜ.க கவுன்சிலர்களுடன் சேர்ந்து வேப்பமூடு சந்திப்பிலுள்ள காமராஜர் சிலைக்கு அணிவித்திருக்கின்றனர். இது பா.ஜ.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரோஸிட்டாவும், அவருடைய கணவர் திருமாலும் தங்கள் கட்சிப் பதவியை ராஜினாமா செய்து, தலைமைக்குக் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

பா.ஜ.க பதவியை ராஜினாமா செய்த திருமால், ரோஸிட்டா

இந்தச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க-வில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபற்றி திருமாலிடம் நாம் பேசினோம். ``பாதுகாப்பு கருதி மாலை அணிவிக்க விடவில்லை எனக்கூறியதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் யாரெல்லாமோ மேடையில் இருந்தபோது, அந்தப் பகுதியின் கவுன்சிலரை மேடையில் ஏற அனுமதிக்காததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே நானும், என்னுடைய மனைவி ரோஸிட்டாவும் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டோம். வேறு கட்சிக்குப் போகும் எண்ணம் இல்லை. பதவி இல்லாமல் பா.ஜ.க-வில் தொடருவோம்" என்றார்.

கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜ்

இதுபற்றி மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜிடம் பேசினோம். "சுமார் ஐம்பதாயிரம் பேர் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் அந்த நிகழ்வு நடந்திருப்பதாக அறிகிறேன். அவர்களிடம் பேசி வருகிறேன்" என்றார் சுருக்கமாக.


மேலும் படிக்க அண்ணாமலை கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு; கட்சி பதவியை ராஜினாமா செய்த கவுன்சிலர்- குமரி பாஜகவில் அதகளம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top