பிராட்வே: மோசமான சாலைகள்; வாகனஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளங்கள்... `அபாயத்தை' உணருவார்களா அதிகாரிகள்?

0

பிராட்வே பேருந்து நிலையத்துக்கு அருகிலேயும், அந்தப் பகுதிகளிலும்... குறிப்பாக, பிரகாசம் சாலையில் கழிவுநீர் மேலாண்மைக்காகத் தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாமல் கிடக்கின்றன. மேலும் பிராட்வே சிக்னலுக்கு அருகிலுள்ள சாலையின் நடுவே இருக்கும் மழைநீர் வடிகால் குழிகள் மூடிய நிலையில் இருந்தாலும், அவை மிகவும் மேடும் பள்ளமுமாக இருப்பதால், போக்குவரத்துக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.

அதேபோல, சாலையிலுள்ள இந்தக் குழிகள் முறையே மூடப்படாமல், அவற்றின்மீது மரப்பலகைகள், பிளாஸ்டிக் தகடுகள் போன்றவை வைக்கப்பட்டிருக்கின்றன. அவையும் முறையே பாதுகாப்பாக வைக்கப்படாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

சாலையின் இரு புறங்களிலும் இது போன்ற பள்ளங்கள் இருப்பதால், நடுவே இருக்கும் குறுகிய பாதையில் வாகனங்களை ஓட்டும் நிலைமைக்கு வாகனஓட்டிகள் தள்ளப்படுகின்றனர். அதிலும் அந்தக் குழிகளை எச்சரிக்கும்விதமாக அங்கே எந்த ஒரு தடுப்புகளும் வைக்கப்படவில்லை. இதனால் பலருக்கும் அடிப்படும் நிலைமை ஏற்படுகிறது.

இது குறித்து அந்தப் பகுதியில் சைக்கிளில் சரக்குகளை ஏற்றிச் செல்பவர்கள் நம்மிடம் பேசுகையில், "தினமும் சைக்கிளில்தான் சரக்குகளை ஏற்றிச் செல்கிறோம். இங்குப் பல கூலித்தொழிலாளிகள் பல வகையான வேலைகளைச் செய்கிறோம். கடந்த சில மாதங்களாகவே இங்குச் சாக்கடை கால்வாய் பணிகள் நடைபெறுவதாகக் கூறி, சாலைகளில் நீண்ட தூரம் பள்ளங்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். இதிலிருந்து துர்நாற்றம் வருவது மட்டுமல்லாமல், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்தச் சாலையில் இது போன்ற பள்ளங்கள் இருப்பதால், பொருள்களை முறையே எடுத்துச் செல்லவும் முடிவதில்லை.

அதையும் மீறி எடுத்துச் செல்லும்போது, கால்களில் அடிப்படுகிறது. அதுமட்டுமின்றி சாலைகளின் நடுவே இருக்கும் இந்தப் பள்ளங்களில் வாகனங்கள் தெரியாமல் இறங்கிவிட்டாலும் அவற்றை எடுப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது. பகல் நேரங்களில்கூட சமாளித்து விடுகிறோம். ஆனால் இரவு நேரத்தில்தான் மிகவும் கடினமாக இருக்கிறது. அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை புகார் தெரிவித்தபோதும், அவர்கள் பெரிதாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வாரத்துக்கு ஒரு முறையாவது இந்தச் சாலையில் யாரேனும் ஒருவருக்கு அடிப்பட்டு விடுகிறது. இது மாதிரி சாலையின் இரண்டு புறங்களிலுமே பள்ளங்கள் இருப்பதால், வாகனத்தை மிகவும் ஜாக்கிரதையாக இயக்க வேண்டியுள்ளது. அப்படி இருந்துமே சிலர் சாக்கடைகளில் விழுந்துவிடுகின்றனர். இந்தச் சாலை, போக்குவரத்து மற்றும் வியாபாரத்துக்கு மிகவும் முக்கியமான சாலையாக உள்ளது. இங்கு நிறைய வியாபாரங்கள் நடக்கின்றன, நிறையக் கடைவீதிகளும் இருக்கின்றன. ஆனால் இந்த முக்கிய சாலையில் இது போன்ற நிறையப் பள்ளங்களும், முறையே மூடப்படாமல் இருக்கும் சாக்கடைகளும் இருக்கின்றன" என்றனர்.

இது குறித்து அந்த வழியே தினசரி வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் சிலர், ``நாங்கள் தினசரி இந்த வழியாகத்தான் வேலைக்குச் செல்கிறோம். இது மாதிரி சாலையின் இரண்டு புறங்களிலுமே சாக்கடைப் பணிகள் நடைபெறுவதாகத் தோண்டப்பட்ட குழிகளால், வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் சிரமமாகத்தான் இருக்கிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது இதில் சிலர் விழுந்துவிடுகின்றனர்.

அதுமட்டுமின்றி ஏற்கெனவே வடிகாலுக்காகப் போடப்பட்டிருக்கும் வடிகால் ஓட்டைகள் முறையே மூடப்படாமல் இது மாதிரியான பலகைகள், பிளாஸ்டிக் அட்டைகளை போட்டிருப்பதால் அவை உடைந்து விடுகின்றன. அந்த இடங்களில் வாகனத்தை முறையாக இயக்கக்கூட முடியவில்லை. கடந்த வாரம்கூட ஒரு பெண் வண்டியில் வரும்போது சாக்கடைக்குள் தவறி விழுந்துவிட்டார். இது போன்று இந்தச் சாலையில் அடிக்கடி நடக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்தப் பள்ளங்களாலேயே அதிகப்படியான போக்குவரத்து நெரிசலும் இங்கு ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.


மேலும் படிக்க பிராட்வே: மோசமான சாலைகள்; வாகனஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளங்கள்... `அபாயத்தை' உணருவார்களா அதிகாரிகள்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top