வகககடடபபட வதபபதல மடடம வகன வபததகள கறநதவடம... நபணர சலவதனன?

0

சமீபத்தில் சென்னையில் இருசக்கர வாகனங்கள், கார்- வேன் உள்ளிட்ட வாகனங்கள், காலை 7 மணி முதல், இரவு 10:00 மணி வரை 40 கிலோ மீட்டர் வேகத்தில்தான் செல்ல வேண்டும் என்று புதிய விதிமுறைகளை காவல்துறை அறிவித்திருந்தது. இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சாலைகளில் விபத்துகள் ஏற்படாதவாறு இரு சக்கர வாகனங்களைப் பாதுகாப்பாக எப்படி ஓட்டலாம் என்பது குறித்து, ஆட்டோமொபைல் துறை வல்லுநர் பார்கவ்விடம் பேசினோம்...

பார்கவ்

``விபத்துகள் ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்றாக வாகனங்களை ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதைக் குறிப்பிடலாம். பொதுவாக வாகனங்களை இயக்கும்போது கவனத்தைச் சிதறவிடக்கூடாது. அதுபோல் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தாலும், பள்ளமாக இருந்தாலும் அவையும் விபத்துக்கு வழி வகுக்கின்றன.

வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கொண்டு வருவது விபத்துகளைத் தவிர்க்கும் என்பதில் எனக்கு அபிப்ராயம் இல்லை. வாகனங்களைப் பொறுத்தவரை, அவற்றைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். வண்டிகளின் டயரை அடிக்கடி சரி பார்க்க வேண்டும். பிரேக் சரியாக இருக்கிறதா என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றை செய்யத்தவறும் பட்சத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

சென்னை நகரில் சின்னச்சின்ன சந்துகளில் வாகனம் ஓட்டும் பலர், தவறான பாதைகளில் வருகின்றனர். இத்தகைய விதிமீறல்களைத் தவிர்க்க வேண்டும். வண்டியின் வேகத்தை உங்களால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றால் அதுவே சிறப்பு. நகரங்களைப் பொறுத்தவரை, வாகனங்களை இயக்க 40 கிலோ மீட்டர் வேகம் என்பது மிகவும் குறைவு. இந்த வேகத்தில் கண்டிப்பாக நகரங்களில் வண்டியை ஓட்டுவது கடினமானது. ஏனென்றால் இந்த வேகத்தில் இயக்கினால், வண்டியும் திணறும், ஒரு கட்டத்தில் உங்களால் சரிவர ஓட்டிச்செல்லவும் முடியாது.

தற்போது வருகின்ற வாகனங்களில் எவ்வளவு கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் பயனாளிகளுக்குச் சொல்லப்படுகின்றன.

டூ வீலர்

வாகன ஆயில்களை பொறுத்தவரையில் நார்மல் ஆயில், பிரீமியம் ஆயில், சிந்தெடிக் ஆயில் என்று வேறுபடுத்தலாம். ஆயிலின் தன்மையைப் பொறுத்து அதற்கான பராமரிப்பு காலம், அதன் வேகம் எல்லாம் வேறுபடும். அதற்கேற்றாற்போல் வேகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வாகனங்களில் தேய்மானம் என்பது, ஆயில் குறைபாடு மற்றும் பிரேக்கில்தான் ஏற்படும். வண்டியை நிறுத்த வேண்டிய கட்டாயம் என்றால், பிரேக் மிகவும் அவசியம். அதனை எப்போதும் சரிபார்த்து பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். தவறும்பட்சத்தில் விபத்துகளுக்கு வழிவகுக்கும்.

அதுபோல ஒருசிலர், டயர் டியூப்பில் அதிகமாக காற்றை ஏற்றுவார்கள். அது வெடித்து விபத்துகள் ஏற்பட வாய்ப்பாகிறது. எனவே, டியூப்பில் சரியான அளவு காற்று இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இப்போது வருகிற புதுமாடல் வண்டிகளின் இண்டிகேட்டரில் சத்தம் வருவதில்லை. இண்டிகேட்டர் சத்தமுள்ள வாகனங்களில், அதன் ஒலி வாகனம் ஓட்டுபவருக்கு அலர்ட் செய்வதாக மட்டுமே இருக்க வேண்டும், மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது. பல வாகன ஓட்டிகள், திரும்பும்போது இண்டிகேட்டர் போடுவதில்லை, கையால் சைகைகூட காட்டுவதில்லை என்பதே உண்மை.

வேகம்

என்னைப் பொறுத்தவரை 40 கிலோ மீட்டர் வேகக்கட்டுப்பாடு விதிப்பது மட்டுமே விபத்தை தடுக்காது. இதுபற்றி வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும். அதோடு ஆர்டிஓ மற்றும் போலீசார் இணைந்து செயல்பட வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இப்போதெல்லாம் 10 முதல் 12 சதவிகிதம் பேரே ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குச் சென்று விதிமுறைகளைப் பின்பற்றி, லைசன்ஸ் வாங்குகின்றனர். இந்த விஷயத்தில் ஆர்.டி.ஓ மற்றும் போலீசார் சரிவர நடவடிக்கைகள் எடுத்தாலே விபத்துகள் கண்டிப்பாகக் குறையும்" என்றார்.


மேலும் படிக்க வேகக்கட்டுப்பாடு விதிப்பதால் மட்டும் வாகன விபத்துகள் குறைந்துவிடுமா... நிபுணர் சொல்வதென்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top