"அதானி துறைமுகப் பணிக்கு தமிழ்நாட்டு கற்கள் வேண்டும்" - விதியை தளர்த்தச் சொல்கிறார் கேரள அமைச்சர்!

0

தமிழ்நாட்டைவிட அதிக அளவில் ஆறுகளும், மலைகளும் கேரளாவில் இருந்தாலும், அங்கு கனிமவளங்களை எடுக்க கடும் கட்டுப்பாடுகள் அரசால் விதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் அப்படி கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால், மாநிலம் தாண்டி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளா மாநிலம், விழிஞ்ஞத்தில் அதானி வர்த்தக துறைமுகம் அமைப்பதற்காகவும், கேரள மாநிலத்தின் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கும் தமிழ்நாட்டிலிருந்துதான் பாறாங்கற்களும், ஜல்லி, எம் சாண்ட் போன்றவையும் கொண்டு செல்லப்படுகின்றன. தமிழ்நாட்டு மலைகளை உடைத்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்துக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது. இதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் வழியாக 10 டயர்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிம வளங்களை ஏற்றிச்செல்லக் கூடாது எனவும், ஒரு லாரியில் 28 டன் எடைக்கு மேல் கனிமவளங்களைக் கொண்டுசெல்லக் கூடாது எனவும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கனிமவளங்கள் கொண்டு செல்ல 2 வழித்தடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், இந்த விதிமுறைகள் வரும் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் குமரியைச் சேர்ந்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் கனிமவள கடத்தல் குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதே சமயம் தமிழ்நாடு அரசின் இந்த முடிவால் விழிஞ்ஞத்தில் அதானி துறைமுகம் அமைக்கும் பணி பாதிக்கும் என கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

கேரள துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவர்கோவில்

தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேரள துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவர்கோவில், தமிழ்நாடு கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், "தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் உத்தரவுபடி 28 டன்னுக்கு மேலும், 10 டயர்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிமவளங்கள் கேரளாவுக்குக் கொண்டுவரக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டின்படி கனிமவளங்கள் கொண்டு சென்றால் நஷ்டம் ஏற்படும் என்பதால் லாரி உரிமையாளர்கள் போக்குவரத்தை நிறுத்தியிருக்கின்றனர். கேரளாவில் செயல்படுத்தப்படும் துறைமுகத் திட்டத்துக்கு கற்கள் உள்ளிட்டவை மாநிலத்துக்குள்ளிருந்தும், வெளிமாநிலத்திலிருந்தும் பெறப்படுகின்றன. துறைமுகத் திட்டத்தின் தேசிய முக்கியத்துவம் கருதி தமிழ்நாடு அரசு இப்போது கொண்டுவந்திருக்கும் புதிய கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருக்கிறது.


மேலும் படிக்க "அதானி துறைமுகப் பணிக்கு தமிழ்நாட்டு கற்கள் வேண்டும்" - விதியை தளர்த்தச் சொல்கிறார் கேரள அமைச்சர்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top