ஒன் பை டூ: காவல்துறை செயல்பாடு குறித்த எடப்பாடி பழனிசாமியின் கருத்து சரியா?

0

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க

``நா கூசாமல் பொய் பேசியிருக்கிறார் பழனிசாமி. எப்போதுமே பா.ஜ.க-வினர்தான் இப்படிப் பொய்யையும், சொன்னதையே மாற்றிப் பேசுவதையும் வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து அ.தி.மு.க-வுக்கும் இந்தப் பழக்கம் வந்துவிட்டதுபோல. தன்னைப் பற்றி ஒரு கார்ட்டூன் போட்டதற்காக, சம்பந்தப்பட்ட நபரை இரவோடு இரவாகக் கைதுசெய்தவர்தானே பழனிசாமி... தமிழக வரலாற்றில் காவல்துறையினரை, தனது ஏவல்துறையாக ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தியது பழனிசாமி மட்டும்தான். அதை மக்களே நன்கு அறிவார்கள். திருப்பூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பெண்மணியை நடுச்சாலையில் வைத்து கன்னத்தில் அறைந்தது, சாத்தான்குளம் தந்தை - மகனை அடித்தே கொன்றது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அராஜகங்களை அரங்கேற்றுவதைத்தான் காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுவதற்கான இலக்கணம் என்கிறாரா பழனிசாமி... அப்படியான நிகழ்வுகள் தி.மு.க ஆட்சியில் ஒருபோதும் நடக்காது. தளபதி ஸ்டாலின் ஒருபோதும் அதை அனுமதிக்கவும் மாட்டார். குற்றமிழைப்பவர்கள் சொந்தக் கட்சியினராக இருந்தாலும், காவல்துறையினராகவே இருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதுதான் தி.மு.க அரசு.’’

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், வைகைச்செல்வன்

வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

``அண்ணன் எடப்பாடியார் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது... அ.தி.மு.க ஆட்சியில் காவல்துறையினர் முழுச் சுதந்திரத்துடன் செயல்பட்டனர். இப்போது முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை இந்த ஆட்சிக்கும், அவர்களின் கட்சிக்கும் எதிராகக் கருத்து சொல்பவர்கள்மீது மட்டும்தானே நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது... காவல்துறையின் செயல்படாத தன்மைக்கு விழுப்புரம் கள்ளச்சாராய மரணம் முக்கிய உதாரணம். மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில்தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள், கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. முன்பு பைக்கில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டார்கள், இப்போது தைரியமாக காரில் வந்து செயின் பறிப்பில் ஈடுபடும் அளவுக்குத் திருடர்கள் முன்னேறியிருக்கிறார்கள். பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வுடனேயே வெளியே செல்லும் நிலை உருவாகியிருக்கிறது. பொதுமக்களைப் பாதுகாக்கவேண்டிய காவல்துறையை தி.மு.க-வினர் தங்களின் ஏவல்துறையாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இனியும், முதல்வர் காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்பட விடவில்லையென்றால், வரும் நாள்களில் அது மிகப்பெரிய சமூகச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும்.’’


மேலும் படிக்க ஒன் பை டூ: காவல்துறை செயல்பாடு குறித்த எடப்பாடி பழனிசாமியின் கருத்து சரியா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top