பழஙகடத தழலளமத சறநர கழதத தனபறததல; பரவம அதரசச வடய- வலககம எதரபப

0

மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பழங்குடியின தொழிலாளிமீது ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் சமூகத்தில் கடும் எதிர்ப்பைக் கிளப்பி, பேசுபொருளாகியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது. மேலும் இந்த வீடியோ மூலம், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் சித்தியில் கூலி வேலை செய்துவரும் பழங்குடி இனத்தவர் என்றும், சிறுநீர் கழித்த நபர் பிரவேஷ் சுக்லா என்றும் அடையாளம் காணப்பட்டது.

அதைத் தொடர்ந்து பிரவேஷ் சுக்லா மீது சித்தியில் உள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 294, 504 மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் குற்றம்சாட்டப்படும் பிரவேஷ் சுக்லா, பா.ஜ.க எம்.எல்.ஏ கேதார் சுக்லாவின் பிரதிநிதி என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

பிரவேஷ் சுக்லா, பா.ஜ.க எம்.எல்.ஏ கேதார் சுக்லா

அதை உறுதிப்படுத்தும் விதமாக பிரவேஷ் சுக்லாவும், பா.ஜ.க எம்.எல்.ஏ கேதார் சுக்லாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் பிரவேஷ் சுக்லாவைத் தனக்கு தெரியும் என்று ஒப்புக்கொண்ட எம்.எல்.ஏ கேதார் சுக்லா, தனக்கு மூன்று பிரதிநிதிகள் இருப்பதாகவும், ஆனால் அதில் ஒருவர் பிரவேஷ் சுக்லா அல்ல என்று மறுப்பு தெரிவித்தார்.

அதேபோல் இந்தச் செயல் எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகளை வரவழைத்ததோடு மட்டுமல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியிருக்கிறது. அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தின் எதிர்கட்சித்த தலைவர் கமல்நாத், ``நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற கொடூரமான செயலுக்கு இடமில்லை. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் முடிவுக்கு வர வேண்டும்" என வலியுறுத்தியிருக்கிறார். அதேபோல், மாநிலத்தின் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், பழங்குடியின தலைவருமான விக்ராந்த் பூரியா, இத்தகைய செயலை `மிகவும் வெட்கக்கேடானது ' என்று விமர்சித்திருக்கிறார்.

பழங்குடியின தொழிலாளிமீது சிறுநீர் கழித்து துன்புறுத்தல்

இந்த நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார். இது குறித்து சிவராஜ் சிங் சௌஹான் தன்னுடைய ட்விட்டரில், ``சித்தி மாவட்டத்தின் வீடியோ ஒன்று என்னுடைய கவனத்துக்கு வந்திருக்கிறது. இதில் குற்றவாளியைக் கைதுசெய்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும், நடவடிக்கையில் அந்த நபருக்கெதிராக தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) போடுமாறும் உத்தரவிட்டிருக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.


மேலும் படிக்க பழங்குடித் தொழிலாளிமீது சிறுநீர் கழித்து துன்புறுத்தல்; பரவும் அதிர்ச்சி வீடியோ- வலுக்கும் எதிர்ப்பு
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top