எததனல எரபரள... இயறக உரம தயரபப... இநதயன ஆயல நறவனததன பசம மயறச!

0

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி செயல் இயக்குநர் (Executive Director & State Head ) வி.சி.அசோகன், பேசும் போது, ``தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு புதிய திட்டங்களுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ.54 ஆயிரம் கோடியை மூதலீடு செய்துள்ளது. கூடவே பசுமையான தூய்மையான எரிபொருளை வழங்குவதை உறுதி செய்யும் பொறுப்பையும் இந்தியன் ஆயில் தன் தோள்களில் சுமந்துள்ளது. இதைப் பொறுத்தவரை, COP-26 உச்சிமாநாட்டில் பஞ்சாமிர்த இலக்குகளின் ஒரு பகுதியாக 2070-ம் ஆண்டுக்குள் பிரதமரால் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் நிகரப் பூஜ்ஜிய உறுதிப்பாட்டுடன் நாங்கள் இணைந்துள்ளோம். இந்தியன் ஆயில் ஏற்கனவே 2046-ம் ஆண்டிற்குள் நிகர-பூஜ்ஜியச் செயல்பாட்டு உமிழ்வை அடையத் தீர்மானித்துள்ளது.

பசுமை

பசுமை ஆற்றலுக்கு நாட்டை மாற்றுவதற்கு ஒரு வலுவான பசுமை நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருகிறோம். உயிரி எரிபொருள்கள், உயிரி எரிபொருள்கள், புதுப்பிக்கத்தக்கவை பசுமைஹைட்ரஜன், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மூலம் கார்பன் ஈடுசெய்தல் பணிகளிலும் செயலாற்றி வருகிறோம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெட்ரோலுடன் 10 சதவிகித எத்தனால் கலப்பை எட்டி இருக்கிறோம். 2025 -ம் ஆண்டிற்குள் இதை 20 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறோம்.

மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 26 சில்லறை விற்பனை நிலையங்களில் 20 சதவிகித எத்தனால் கலக்கப்படப் பெட்ரோல் (E-20) விநியோகம் நடைபெற்று வருகிறது. 2024-ம் ஆண்டுக்குள் இதை 66 நிலையங்களுக்கு விரிவுபடுத்த உள்ளோம். 100 சதவிகிதம் எத்தனால் மூலம் கூட வாகனங்களை இயக்கலாம். இதன் மூலம் எரிபொருள் விலையும் குறையும். ஆனால், தற்போது உள்ள வாகனங்கள் எத்தனாலுக்கு ஏற்ற வகையில் இல்லை. வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுடன் இது சம்பந்தமாகப் பேசி வருகிறோம்.

மரம் நடுதல்

இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 400 EV சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது. மேலும் 300 நிலையங்களைத் தமிழகத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். சென்னை விமான நிலையத்திலும் ஒரு EV சார்ஜிங் நிலையம் அமையவிருக்கிறது. நாமக்கல்லில் உள்ள பயோ கேஸ் உற்பத்தி ஆலையில் ஐஸ்வர்யம் என்ற பெயரில் இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் மூலம் மரகன்றுகள் நடும் பணியிலும் ஈடுப்பட்டு வருகிறோம் ’’ என்றார்.

இந்நிகழ்வில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (நிறுவன தொடர்பு) முதன்மை பொது மேலாளர் வெற்றிச்செல்வன், மண்டல சேவைகள் பிரிவு இயக்குநர் தனபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மேலும் படிக்க எத்தனால் எரிபொருள்... இயற்கை உரம் தயாரிப்பு... இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பசுமை முயற்சி!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top