செல்போன் வெளிச்சத்தில் தையல்போட்ட மருத்துவ ஊழியர்கள்; செஞ்சி அரசு மருத்துவமனை அவலம்!

0

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் இயங்கி வருகிறது அரசு பொது மருத்துவமனை. இங்கு அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாகவும், மருத்துவர்களின் செயல்பாடுகள் அதிருப்தியளிக்கும் வகையில் இருப்பதாகவும் மக்கள் தொடர் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், செஞ்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதலே பரவலாக மழை பெய்து வந்துள்ளது. இதனால் அவ்வப்போது மின்சாரம் தடைபட்டு போயுள்ளது. அரசு மருத்துவமனையிலும் மின்சாரம் இல்லாமல் போயுள்ளது. ஆனால், மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிலிருந்த இன்வெர்டர் முறையாகப் பராமரிக்கப்படாமல், பழுதடைந்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

செஞ்சி அரசு மருத்துவமனை

இதனிடையே தலையில் காயமடைந்த ஒருவர், சிகிச்சை பெறுவதற்காக இந்த மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். மருத்துவமனையில் மின்சாரமே இல்லாததால், தலையில் காயமடைந்து வந்தவருக்கு செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தையல் போட்டிருக்கின்றனர் மருத்துவ ஊழியர்கள். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வேகமாகப் பகிரப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. 

வீடியோ காட்சிகள்

இது குறித்து விளக்கம் கேட்க விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் லட்சுமணனைத் தொடர்பு கொண்டோம். "இந்த விஷயம் என்னுடைய கவனத்துக்கு வந்தது. சி.எம்.ஓ-விடம் (Casualty Medical Officer) தகவல் தெரிவித்தேன். அது ஜெனரேட்டரை ஆபரேட் செய்யும் நேரம்தான் என்று சொன்னார்கள். யு.பி.எஸ் பேக்கப் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். மற்ற எதுவென்றாலும் அலுவலகத்துக்கு நேராக வந்து பேசுங்கள்" என்றபடி அழைப்பை துண்டித்துக் கொண்டார்.


மேலும் படிக்க செல்போன் வெளிச்சத்தில் தையல்போட்ட மருத்துவ ஊழியர்கள்; செஞ்சி அரசு மருத்துவமனை அவலம்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top