ஒன் பை டூ: "பாஜக முறித்துக்கொள்ளும்வரை நாங்கள் கூட்டணியில் தொடர்வோம்" என்ற ஓ.பி.எஸ் கருத்து சரியா?

0

டி.ஜெயக்குமார்; முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

``ஓ.பி.எஸ்-ஸின் இந்தக் கருத்திலிருந்து அவர் அரசியலுக்கே லாயக்கில்லாதவர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. நாங்கள்தான் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறோம். அவர் இல்லை என்பது மிகவும் வெளிப்படையாகச் சொல்லப்பட்டுவிட்டது. ஆனால், இவ்வளவு நடந்த பிறகும் காலைப் பிடித்துக்கொண்டு, ‘என்னை விட்டுவிடாதீர்கள்’ என்று கெஞ்சிக்கொண்டிருப்பதாகவே அவரின் கருத்தை எடுத்துக்கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து, அ.தி.மு.க-வில் தலைமைப் பதவி வகித்த, நீண்ட அரசியல் அனுபவம்கொண்ட ஒருவரால் எப்படிக் கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் முகம் சுளிக்கும் அளவுக்கு நடந்துகொள்ள முடிகிறது... அவர் இத்தனை ஆண்டுக்காலம் அ.தி.மு.க-வில் பயணித்தார் என்பதைச் சொல்லவே அருவருப்பாக இருக்கிறது. அவரை நம்பியவர்கள் அனைவரையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டார். தான் ஒரு முன்னாள் அ.தி.மு.க-காரன் என்று சொல்வதற்குக்கூட ஓ.பி.எஸ் அருகதையற்றவர். கோடானு கோடி அ.தி.மு.க தொண்டர்களின் ஆலயமான, கட்சியின் அலுவலகத்தை குண்டர்களைவைத்து அடித்து நொறுக்கினாரே... அன்றே ஒவ்வோர் அடிமட்ட தொண்டரும் ஓ.பி.எஸ்-ஸை துரோகியாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். துரோகம் அவரின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. அம்மாவின் ஆன்மாகூட ஓ.பி.எஸ்-ஸை ஒருபோதும் மன்னிக்காது.’’

மருது அழகுராஜ், டி.ஜெயக்குமார்

மருது அழகுராஜ், ஓ.பி.எஸ் ஆதரவாளர்

``பிளவுபட்ட அ.தி.மு.க-வின் நிலைமையை, தங்களின் அரசியலுக்காக பா.ஜ.க பயன்படுத்துவதை உணர்த்தும் ஒரு கருத்தாகவே இதைப் பார்க்கிறேன். பா.ஜ.க-வை ‘இந்தியாவின் மிக மோசமான கட்சி’ என்று விமர்சித்தவர் பொன்னையன். ‘சனியன் தொலைந்தால் போதும்’ என்று காரித் துப்பியவர் சி.வி.சண்முகம். இவர்களோடு, 11 மணி பாடகர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்களும் கோரஸ் பாடினார்கள். ஆனால், கூட்டணி தர்மத்துடன் குறைகளை நெறியோடு எடுத்துச் சொல்லி, பா.ஜ.க-வுக்கு உரிய மரியாதை அளித்தவர் ஓ.பி.எஸ். பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில், தங்களைத் தாறுமாறாக விமர்சனம் செய்த ‘எட்டு தோல்வி’ எடப்பாடிக்கு அழைப்பு விடுத்ததோடு, மழைக்காலக் கூட்டத்தொடரில் ரவீந்திரநாத்துக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள். இது, பா.ஜ.க-வின் சித்து விளையாட்டாகவே கருதப்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் மனதில்கொண்டுதான் பழுத்த அரசியல் அனுபவம்கொண்ட அண்ணன் ஓ.பி.எஸ்., `அவர்களாக நீக்கும் வரை நீடிப்போம்’ என்று பேசியிருக்கிறார். கூடவே, எதிர்க்கட்சிக் கூட்டணியையும் வரவேற்றிருக்கிறார். எடப்பாடியால் ஒருபோதும் தமிழக மக்களின் வாக்குகளைப் பெற முடியாது. வீர வசனம் பேசிய எடப்பாடி படுத்துவிட்டார். அண்ணன் ஓ.பி.எஸ் வீரத்தோடு அரசியலை முன்னெடுக்கிறார். இதை எதிர்வரும் அரசியல் நிகழ்வுகள் உறுதிப்படுத்தும்.


மேலும் படிக்க ஒன் பை டூ: "பாஜக முறித்துக்கொள்ளும்வரை நாங்கள் கூட்டணியில் தொடர்வோம்" என்ற ஓ.பி.எஸ் கருத்து சரியா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top