முதல்வர் பேசும்போது அலறிய மைக் செட்... வழக்கு பதிந்து சவுண்ட்ஸ் உரிமையாளரை விசாரித்த போலீஸ்!

0

கேரள மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கடந்த வாரம் காலமானார். அவருக்கு இரங்கல் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் திருவனந்தபுரம் ஐயங்காளி ஹாலில் நடந்த இரங்கல் கூட்டத்துக்கு முதல்வர் பினராயி விஜயனும் அழைக்கப்பட்டிருந்தார். இதில் கலந்து கொண்டு பினராயி விஜயன் பேசும்போது, திடீரென மைக் அலறியது. இதனால் அரங்கத்தில் சற்று பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஒரு நிமிடத்தில் மைக் சரிசெய்யப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் முதல்வர் நிகழ்ச்சியில் மைக் அலறிய சம்பவம் குறித்து திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. முக்கிய பிரமுகர் பேசும்போது மைக் அலறல் ஏற்படுத்தி பொது பாதுகாப்பை பாதிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும், அவமானப்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் மைக் செட் ஆபரேட்டர் மீது திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

உம்மன் சாண்டி

குற்றவாளி யார் என பெயர் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்த நிலையில் வட்டியூர்காவு எஸ்.பி சவுண்ட்ஸ் உரிமையாளர் ரஞ்சித்தை காவல் நிலையத்துக்கு வரவழைத்ததுடன், அவரின் மைக், ஆம்பிளிபயர், மைக்குக்கு பயன்படுத்தும் கேபிள்கள் உள்ளிட்டவைகளை போலீஸார் காவல் நிலையத்துக்கு கொண்டுவரும்படி கூறினர். ரஞ்சித்தும் மைக் செட்டுகளை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றார். இந்த சம்பவம் கேரள அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்கள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். விஷயம் சர்ச்சை ஆனதைத்தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் தலையிட்டு மைக்கை திரும்ப ஒப்படைக்கும்படி கூறியதாக தகவல் வெளியானது.

பினராயி விஜயன் பேசும்போது மக்கர் செய்த மைக்

மேலும், பொதுப்பணித்துறையின் எலக்ட்ரானிக் பிரிவு அதிகாரிகள் மைக் உள்ளிட்டவைகளை பரிசோதித்தனர். அதில் மைக் ஆபரேட்டர் வேண்டும் என்றே மனப்பூர்வமாக இதைச் செய்யவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மைக் செட் உள்ளிட்டவை அதன் உரிமையாளரான ரஞ்சித்திடம் ஒப்படைக்கப்பட்டது. முதல்வர் பினராயி விஜயன் பேசிய மேடையில் மைக் அலறியது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸ் நடவடிக்கை விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க முதல்வர் பேசும்போது அலறிய மைக் செட்... வழக்கு பதிந்து சவுண்ட்ஸ் உரிமையாளரை விசாரித்த போலீஸ்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top