``அண்ணாமலை யாத்திரையுடன் தமிழகத்தில் பாஜக சரித்திரம் முடிவுக்கு வரும்!"- முத்தரசன் காட்டம்

0

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் 13-ம் மாநில மாநாடு நேற்று (28-07-2023) தொடங்கியது. இதில் தமிழக இந்திய இம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் குல்சார்சிங் கொரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சிபிஐ

அப்போது சி.பி.ஐ.மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "விவசாயத்தில் 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளநிலையில் விவசாயத்துக்கென தனித்துறை உருவாக்க வேண்டும். கலைஞர் ஆட்சியில் இருந்ததுபோல விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்.

மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக அதிகப்படுத்தி, இத்திட்ட தொழிலாளர்களை விவசாய பணிகளிலும் ஈடுபடுத்த வேண்டும். இலவச வீட்டு மனை பட்டாவுடன் அருகே பயிர் சாகுபடிக்கு தேவையான நிலத்தையும் வழங்க வேண்டும். தீண்டாமை என்பது அரசியல் சாசன சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் இன்னும் வேங்கை வயல் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

மாநாடு

பல இடங்களில் இரட்டை குவளை முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். நெற்கதிர்களை அறுவடை செய்யும் நேரத்தில் மூர்க்கத்தனமான முறையில் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கையகப்படுத்துவது ஏற்கதக்கதல்ல. அறுவடை முடியும் வரை அதிகாரிகள் காத்திருக்க வேண்டும்.

அண்ணாமலையின் யாத்திரையுடன் பா.ஜ.க. சரித்திரம் தமிழகத்தில் முடிவுக்கு வருகிறது. ராகுல் காந்தி நடத்திய யாத்திரைக்கும், அண்ணாமலை யாத்திரைக்கும் வித்தியாசம் உள்ளது. அண்ணாமலை ஒரு விளம்பர பிரியர். தனது செய்தி தினமும் வரவேண்டுமென அவர் விரும்புகிறார். இது விளம்பரத்திற்காக நடத்தும் யாத்திரை. இதனால் எந்த விளைவும் ஏற்பட போவதில்லை.

முத்தரசன்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி என்பது உருவாக வாய்ப்பு இல்லை. அப்படி உருவாகினாலும் பாஜகவின் பி-டீம் ஆகத்தான் இருக்கும். எத்தனை அணி உருவானாலும் இந்தியா என்ற அணி தான் மகத்தான வெற்றி பெறும். நாடாளுமன்றத்திற்கு வராமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் மோடி இனி நாட்டிற்கு தேவையில்லை. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.


மேலும் படிக்க ``அண்ணாமலை யாத்திரையுடன் தமிழகத்தில் பாஜக சரித்திரம் முடிவுக்கு வரும்!"- முத்தரசன் காட்டம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top