அமித் ஷா பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்; எதிர்பார்த்து காத்திருந்த தொண்டர்; ஆறுதல் கூறிய அண்ணாமலை!

0

ராமேஸ்வரத்துக்கு அண்ணாமலையின் `என் மண், என் மக்கள்' பாதயாத்திரையை தொடங்கி வைப்பதற்காக வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதில், ராமேஸ்வரம் அருகே ஏறகாடு கிராமத்தில் பா.ஜ.க நகர் பொதுச்செயலாளர் முருகன் என்பவர் வீட்டுக்கு அமித் ஷாவை அழைத்துச் செல்வதற்காக மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டிருந்தார். அமித் ஷாவின் பயண திட்டத்திலும் பா.ஜ.க தொண்டர் வீட்டுக்குச் செல்வது இடம்பெற்றிருந்தது. அதனால், அந்த கிராமத்தில் இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டன. அவரது வீடு முழுவதும் சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பு கருதி காஸ் சிலிண்டர் உட்பட சில பொருள்களை அப்புறப்படுத்தியிருந்தனர்.

அமித் ஷா பயணத்திட்டத்தில் இடம்பெற்ற தொண்டர் வீடு

மேலும் வெளி நபர்கள் யாரும் அந்த கிராமத்திற்குள் வரக் கூடாது என உத்தரவிட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அமித் ஷா வரும்போது யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என கிராமத்தினருக்கு கட்டுப்பாடு விதித்தனர். இந்த நிலையில் நேற்று காலை அமித்ஷா வருகையையொட்டி அவருக்கு கொடுப்பதற்காக பா.ஜ.க நிர்வாகி முருகன் தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளை தயார் நிலையில் வைத்திருந்தார். ராமநாதபுரம் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளைப் பரிசோதித்தனர். அமித் ஷா வருகைக்காக முருகன் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அமித் ஷா வருகை ரத்துசெய்யப்பட்டு, அவரது சார்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வருவதாகத் தெரிவிக்கப்பட்டதால், அனைவரும் ஏமாற்றமடைந்தனர்.

தொண்டர் முருகன் வீட்டில் அவரிடம் உரையாடும் அண்ணாமலை

பின்னர் வீட்டுக்கு வந்த அண்ணாமலையைக் காலில் விழுந்து பா.ஜ.க நிர்வாகி முருகன் வரவேற்றார். பதிலுக்கு அண்ணாமலையும் முருகன் காலில் விழுந்தார். அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அமித் ஷா பயணத்திட்டத்தின் திடீர் மாற்றத்தால் இங்கு வர முடியவில்லை. கவலைப்பட வேண்டாம். அவரது சார்பில்தான் நான் வந்திருக்கிறேன், உங்களது கோரிக்கையை என்னிடம் கூறுங்கள் என தெரிவித்தார். அப்போது தனக்கு வீடு கட்டி கொடுக்குமாறு அண்ணாமலையிடம் கோரிக்கை வைத்தார். உங்களுக்குப் பிடித்த இடத்தில் மூன்று சென்ட் நிலத்தைக் காட்டுங்கள், அங்கு உங்களுக்கு புதிய வீடு கட்டி கொடுக்கிறேன் என உத்தரவாதம் அளித்தார். அதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் தேநீர் அருந்திய அண்ணாமலை, அவரது குடும்பத்தாரிடம் சிறிது நேரம் உரையாடிய பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


மேலும் படிக்க அமித் ஷா பயணத்திட்டத்தில் திடீர் மாற்றம்; எதிர்பார்த்து காத்திருந்த தொண்டர்; ஆறுதல் கூறிய அண்ணாமலை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top