ஒன ப ட: பத சவல சடடம கறதத தமழச சநதரரஜனன கரதத சரய?

0

ஏ.பி.முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர், பா.ஜ.க

``உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். அரசு எந்தத் திட்டம் கொண்டுவந்தாலும் அதை எதிர்ப்பதை மட்டுமே எதிர்க்கட்சிகள் வேலையாக வைத்திருக்கின்றன. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு அனைத்துச் சமுதாய மக்களும் ஒன்றாக, ஒற்றுமையாக வாழ்கிறார்கள். எனவே, சாதி, மத, இன, பாலினப் பாகுபாடு இல்லாமல் அனைத்துச் சமூக மக்களுக்குமான ஒரு பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியம். அரசியலமைப்புச் சட்டத்திலேயே பிரிவு 44-ல், `பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தச் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று பொய்யான பரப்புரை செய்வது கண்டிக்கத்தக்க செயல். கடும் எதிர்ப்புகளை மீறி முத்தலாக் முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதை இஸ்லாமியச் சகோதரிகள் முழு மனதோடு வரவேற்றனர். அதேபோல இந்தச் சட்டமும் நடைமுறைக்கு வந்தால் யாருக்கும், எந்த பாதிப்பும் இருக்காது. மாறாக, இந்தச் சமூகத்தில் நிலவும் பாகுபாடுகள் களையப்பட்டு அனைவருக்கும் சமமான பலன்கள் கிடைக்கும். சிறுபான்மையினருக்குக் கடுகளவுகூட தீங்கு நேராது.’’

ஏ.பி.முருகானந்தம், கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சி.பி.எம்

`` `பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது’ என்ற தமிழிசையின் கருத்து அபத்தமான பொய். சிறுபான்மை மக்களுக்கு மட்டுமன்றி, இந்து மதத்தில் இருக்கும் பல்வேறு பிரிவினரின் நலனுக்கும் இந்தச் சட்டம் எதிரானது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினர் தொடங்கி, பலரும் இந்தச் சட்டத்துக்கு எதிராகக் குரலெழுப்பிவருகிறார்கள். இந்திய சட்ட ஆணையம், `பொது சிவில் சட்டத்தை இப்போது கொண்டுவரத் தேவையோ, அவசியமோ இல்லை’ எனத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அதையும் தாண்டி இந்தச் சட்டத்தைக் கொண்டுவரத் துடிப்பதற்கு பா.ஜ.க-வின் அரசியல் ஆதாயம் மட்டுமே காரணம். இதன் மூலம், சிறுபான்மை மக்களை ஒடுக்கி, அப்பாவி பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும். மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்த வேண்டும் என்பதே இவர்களின் ஒற்றை நோக்கம். அதற்காக என்ன பொய் வேண்டுமென்றாலும் சொல்லத் தயங்க மாட்டார்கள். தேர்தல் வெற்றிக்காக இவர்கள் கொடுத்த வாக்குறுதியால்தான் இன்று மணிப்பூர் பற்றி எரிகிறது. அதேபோல, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவந்து, மொத்த இந்தியாவையும் தீக்கிரையாக்கி, அரசியல் ஆதாயம் பெற நினைக்கிறார்கள்.’’


மேலும் படிக்க ஒன் பை டூ: பொது சிவில் சட்டம் குறித்த தமிழிசை சௌந்தரராஜனின் கருத்து சரியா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top