வயபபலல ரஜ வயபபலல..." - ஹச.ரஜ பசசகக சமன கமனட

0

புதுக்கோட்டை மாவட்டத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில், பல்வேறு இடங்களில் கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், ``பா.ஜ.க-வில் இணைவதற்கு ஹெச்.ராஜா எத்தனை முறை அழைத்தாலும் `வாய்ப்பில்லை ராஜா..' என்பதுதான் என்னுடைய பதில். அவர் அன்போடு அழைத்தாலும், நட்பு என்பது வேறு, அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. அவர் என்னை அழைப்பதை, எங்களது வளர்ச்சியைக் காட்டுவதாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். `தமிழ் தேசியம் வெற்றி பெறாது, தோற்றுப்போகும்' என்று திருமாவளவன் சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழ் தேசியம் குறித்து அவரிடமிருந்துதான் நாங்கள் கற்றுக்கொண்டோம். அவரது மாணவர்கள் நாங்கள். அவர் தோற்றுப்போனதால், நாங்களும் தோற்றுப்போவோம் என்பது தவறான பார்வை. எப்போதும், ஆசிரியர்களால் ஓடி வெற்றி பெற முடியாது. மாணவர்களால்தான் வெற்றி பெற முடியும்.

ஹெச்.ராஜா

வெற்றி பெற்றுக் காட்டுவோம். தமிழக அரசிடம் யாரும் ரூ.1,000 உரிமைத் தொகை கொடுங்கள் என்று கேட்கவில்லை. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 உதவித் தொகை என்று தேர்தலுக்கு முன்பாக அறிவித்துவிட்டு, இப்போது விதிமுறைகளை விதிக்கின்றனர். இது மிகப்பெரிய கொடுமை. டி.ஐ.ஜி விஜயகுமார் மன அழுத்தத்தின் காரணமாகவே உயிரிழந்திருக்கிறார். 6 மாதங்கள் விடுமுறை கேட்டிருக்கிறார், கொடுக்கவில்லை. அந்த அழுத்தத்தின் காரணமாக உயிரிழந்திருக்கிறார். இது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க, காவல்துறையினருக்கு சுழற்சிமுறையில் விடுமுறை அளிக்க வேண்டும்.

பேனா சிலை கடற்கரையில் அமைக்கப்பட்டால், கண்டிப்பாக அதனை உடைத்தெறிவோம். அதில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சென்னை சிறுவன் கை இழந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, சுகதாரத்துறை அமைச்சரின் பதில், பொறுப்பற்ற ஆணவமான பதில். இழப்பீடு கொடுத்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று உறுதி கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் அரசு மருத்துவர்கள் திறமையற்றவர்கள் என்று சொல்லவில்லை. இந்த விவகாரத்தில், மருத்துவர்களின்றி செவிலியர்கள்தான் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறுகின்றனர். அதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

சீமான்

ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தைப் பொறுத்தவரை ஜனநாயகப் படுகொலை என்றுதான் சொல்ல வேண்டும். கலைஞருக்கு ஒரு `பராசக்தி' என்றால், மாரி செல்வராஜுக்கு ஒரு `மாமன்னன்' என்றுதான் சொல்ல வேண்டும். இதில், எங்கு உதயநிதி வருகிறார். கதை எழுதியவருக்குத்தானே முதல் உரிமை கொடுக்க முடியும். இதுபோன்ற பட்டியலின மக்கள் பிரச்னைகளைப் பேசும் படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும். கிருஷ்ணசாமி இதுபோன்ற படங்கள் வரக் கூடாது என்று சொல்வதற்கு அவருக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது. `தேவர் மகன்' படம் வரும்போது எதிர்த்தது, `விருமாண்டி' படம் வரும்போது அந்த படத்திற்கு `சண்டியர்' என்ற பெயரை வைக்க விடாமல் தடுத்ததும், `கொம்பன்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் இவர்தான். இதெல்லாம் தேவையற்றது" என்றார்.


மேலும் படிக்க ``வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை..." - ஹெச்.ராஜா பேச்சுக்கு சீமான் கமென்ட்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top