வேங்கைவயல்: டி.என்.ஏ பரிசோதனை கோரிய சிபிசிஐடி... சிறுவர்கள் ஆஜராக நீதிபதி உத்தரவு!

0

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியல் சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணை நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக, 150-க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடையங்களை சேகரிப்பதற்காக, இறையூர் மற்றும் வேங்கைவயலைச் சேர்ந்த 21 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

வேங்கைவயல்

இதற்கிடையே, இந்த வழக்கில் மேலும், இறையூரைச் சேர்ந்த 3 சிறுவர்களுக்கும், வேங்கைவயலைச் சேர்ந்த சிறுவன் ஒருவருக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய அனுமதிக்கக் கோரி புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கடந்த 10-ம் தேதி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவோா் சிறாா்கள் என்பதால், அவா்களின் பெற்றோர் கருத்தை அறிய வேண்டியது அவசியம். எனவே, பெற்றோர்கள் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இறையூர் கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்களின் பெற்றோர், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் பெற்றோர் ஆஜராகினர்.

இதில், வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவனின் சார்பில், ஆஜரான வழக்கறிஞர், சிறுவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். அதோடு, சி.பி.சி.ஐ.டி போலீஸார் சிறுவர்களிடம் சட்ட விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதாகவும் தன் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

சி.பி.சி.ஐ.டி போலீஸார் தரப்பில் அரசு வழக்கறிஞர் வாதங்களை வைத்தார். இதற்கிடையே பள்ளி சென்றுவிட்டதால், சிறுவர்கள் ஆஜராகவில்லை. இந்த நிலையில் தான், உடனடியாக அனுமதி கொடுக்காமல், விசாரணையை ஜூலை 14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். 14-ம் தேதி மாலை சிறுவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க வேங்கைவயல்: டி.என்.ஏ பரிசோதனை கோரிய சிபிசிஐடி... சிறுவர்கள் ஆஜராக நீதிபதி உத்தரவு!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top