``தேர்தல் நேரத்தில் சோறு... பீரு.. 100 போதும் என நினைக்காதீர்கள்!" - விஜய பிரபாகரன் அட்வைஸ்

0

தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும். தமிழகத்துக்கு வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். விளை நிலங்களை என்.எல்.சி அழிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தே.மு.தி.க சார்பில் அறிவிக்கப்பட்டது.

தேமுதிக ஆர்ப்பாட்டம்

அதன்படி சென்னை, ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார். பல்வேறு பகுதிகளில் சேர்த்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய விஜயபிரபாகரன், "தமிழகம் முழுவதும் கேப்டன் ஆணைக்கு இணங்க ஆளும் திமுக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

எத்தனையோ வாக்குறுதிகளை திமுக அரசு மக்களுக்காக கொடுத்திருந்தது. ஆனால் எதையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா?. மக்கள் சிந்திக்க வேண்டும். 2021-ம் ஆண்டில் வாக்கு சேகரிக்கும் பொழுது ரூ.1,000 அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்தார்கள். அன்று மட்டும் அனைத்து பெண்களின் வாக்கும் வேண்டும். ஆனால் இன்று தகுதி இருப்பவர்களுக்கு மட்டும் ரூ.1,000 வழங்கப்படும் என்றால் எந்தவிதத்தில் நியாயம்.

முதல்வர் ஸ்டாலின்

அனைவருக்கும் ரூ.1,000 கொடுப்போம் என பொய் சொன்னது மட்டும் இல்லாமல் மற்றொரு புறம் டாஸ்மாக் கடைகளை திறந்து வருகிறார்கள். ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு டாஸ்மாக்கில் சென்று கொடுக்கிறார்கள். திமுக அரசு குடியை நிறுத்தியிருக்கிறதா?. என்எல்சி விவகாரத்தில் ஒன்று விவசாயிகளை பயிர் செய்ய விட்டிருக்க கூடாது. அல்லது அறுவடை முடிந்த பிறகு கொடுத்திருக்க வேண்டும். இன்று தேவை இல்லாத அரசியல் சர்ச்சையாகி யாருக்கும் பயன் இல்லாமல் இருக்கிறது. அடிப்படை அறிவு கூட இல்லாமல் அரசு செயல்படுகிறது.

மக்களை ஆளும் அரசுக்கு மட்டும் எந்த அனுபவத்தையும் பார்ப்பதில்லை. அவர்களிடம் கேள்வியும் கேட்பதில்லை. தேர்தல் நேரத்தில் சோறு.. பீரு.. 100 வந்தால் மட்டும் போதும் என நினைக்கிறீர்கள். ஒருநாள் சந்தோஷத்துக்கு அவர்களுடைய காலில் உங்களது 5 ஆண்டு வாழ்க்கையை சமர்ப்பணம் செய்கிறீர்கள். அவர்கள் ஏசி காரில் ஜாலியாக போகிறார்கள். எல்லாப் பக்கமும் சிலை திறந்து கொண்டிருக்கிறார்கள். போலி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

தேமுதிக ஆர்ப்பாட்டம்

அனைத்து மாவட்டங்களிலும் புகார் பெட்டி வைப்பதாக சொன்னார்கள். அதையும் செய்யவில்லை. புகார் பெட்டி வைத்தால் ஆளும் திமுக அரசு மீது மொத்த புகாரும் வந்து விழும் என்பதற்காகத் தான் வைக்கவில்லை. கர்நாடகாவில் திமுகவின் கூட்டணி அரசு தான் இருக்கிறது. அங்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து மட்டும் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். பத்திரிகையாளர்களையும் சந்திக்கவில்லை. போட்டோசூட் மட்டும் நடத்தியிருக்கிறார்கள். இதெற்கெல்லாம் எந்த பதிலும் இல்லை.

ஆனால் செந்தில் பாலாஜியை கைது செய்தால் மட்டும் மொத்த குடும்பமும் மருத்துவமனைக்கு ஓடும். ஓமத்தூரார் மருத்துவமனையில் இருந்தவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றினார்கள். ஓமத்தூராரில் இருப்பது அரசு மருத்துவமனை தானே. சிகிச்சை சரியில்லை என செந்தில் பாலாஜியை மாற்றிய தேதியில் எத்தனை பொதுமக்கள் அங்கு இருந்திருப்பார்கள். அவர்களையும் காவேரிக்கு மாற்றியிருக்க வேண்டியது தானே. செந்தில்பாலாஜிக்கு மட்டும் உயிரு.. மத்தவங்களுக்கு வேறு ஏதோவா?. மக்கள் இதை உணர வேண்டும்" என்றார்.

செந்தில் பாலாஜி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், " செந்தி பாலாஜி மீது அமலாக்கத்துறை வேண்டும் என்று ரெய்டு செய்ய மாட்டார்கள். என்ன நடக்கிறது என மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவருக்கு உடல்நிலை சரியில்லாத பொழுது மொத்த குடும்பமும் அங்கு செல்கிறது என்றால் சந்தேகம் வருகிறது. அவர் மாட்டினால் மொத்த திமுகவும் மிகப்பெரிய சர்ச்சைக்குள் மாட்டுவார்கள்" என்றார்.

நடிகர் ரஜினி குடிப்பழக்கம் இல்லாவிட்டால் இன்னும் மிகப்பெரிய உயர்த்தை தொட்டிருப்பேன் என கூறுகிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "பாதிக்கப்பட்டவர்கள் பேசுகிறார்கள். எனக்கு அந்த பழக்கம் இல்லை. அதுகுறித்து எனக்கு தெரியாது, தவறான விஷயம் தான்" என்றார்.


மேலும் படிக்க ``தேர்தல் நேரத்தில் சோறு... பீரு.. 100 போதும் என நினைக்காதீர்கள்!" - விஜய பிரபாகரன் அட்வைஸ்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top