'மதுரை அதிமுக மாநாட்டின் பட்ஜெட் ரூ.250 கோடி; ஆளுக்கு 1,000 ரூபாய்!' - திருச்சியில் டி.டி.வி.தினகரன்

0

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அ.ம.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்காக திருச்சிக்கு வந்திருந்த அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "நானும் நண்பர் ஓ.பி.எஸ்-ஸூம் சேர்ந்து வருங்காலங்களில் அரசியலில் பயணிப்போம். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடனான கூட்டணியில் அ.தி.மு.க., இருக்கும் பட்சத்தில், அந்தக் கூட்டணியில் அ.ம.மு.க., இருக்குமா... இருக்காதா என்பதை தேர்தல் நேரத்தில் முடிவுசெய்வோம். 2019 காலகட்டத்தில் நம்முடைய அண்ணன் மாவீரன் பழனிசாமி ஆட்சியில் அவர்களுடைய தவறான ஆட்சிமுறையால் மக்கள் கொதிப்படைந்து, எதிர்ப்புணர்வைக் காட்டுவதற்காகத்தான் தி.மு.க., கூட்டணிக்கு வாக்களித்தார்கள். 2021 தேர்தலிலும் அதுதான் நடந்தது. ஆனால், இந்த இரண்டரை ஆண்டுகளில் பழனிசாமியையும் தாண்டி அவருக்கு அண்ணனைப்போல ஸ்டாலினுடைய ஆட்சி இருக்கிறது.

டி.டி.வி.தினகரன்

தமிழ்நாட்டு மக்களுடைய கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறார்கள். அதனால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல் ஆகியவை தி.மு.க-வை எதிர்த்து மக்கள் வாக்களிக்கின்ற தேர்தல்களாக இருக்கும். உறுதியாக தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க-வுக்கும் பழனிசாமிக்கும் மாற்றாக அ.ம.மு.க-வை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் பயணிக்கிறோம்" என்றார்.

தொடர்ந்து பேசியவர், "தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை விலக்கிவிடுவோம் என்று சொன்னார்கள். மக்களை ஏமாற்றும்விதமாக தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதி அது. தி.மு.க-வுடைய குணாதிசயமே மக்களை ஏமாற்றுவதுதான். மதுரை அ.தி.மு.க., மாநாட்டுக்காக, கடந்த ஆட்சியில் ஈட்டிய செல்வத்தையெல்லாம் கொண்டு மக்களை அள்ளிச் செல்லலாம் என நினைக்கிறார்கள். எப்படியும் 250 கோடி ரூபாய் அளவுக்குப் பணத்தை வாரியிறைப்பார்கள். ஓர் ஆளுக்கு 1,000 ரூபாயும், இன்ன பிறவற்றையும் கொடுத்து மாநாட்டுக்கு மக்களைக்கூட்ட இருக்கிறார்கள். தொண்டர்கள் தானாகக் கூடாத வரை, அந்த மாநாடு வெற்றியைத் தராது.

எடப்பாடி பழனிசாமி அம்மாவுடைய கட்சியை கபளீகரம் செய்திருக்கிறார். அதை ஜனநாயக முறைப்படி மீட்டெடுப்பதற்காக அம்மாவின் உண்மையான தொண்டர்களால் உருவாக்கப்பட்டதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். தொடர்ந்து நாங்கள் நம்பிக்கையுடன் போராடி உறுதியாக வருங்காலத்தில் ஜனநாயக ரீதியாக மீட்டெடுப்போம். 2026 தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்துவதற்காக அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எல்லாம் ஓர் அணியில் இணைவார்கள்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs


மேலும் படிக்க 'மதுரை அதிமுக மாநாட்டின் பட்ஜெட் ரூ.250 கோடி; ஆளுக்கு 1,000 ரூபாய்!' - திருச்சியில் டி.டி.வி.தினகரன்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top