மும்பை விமான நிலையத்தில் சிக்கிய உகாண்டா பிரஜை... வயிற்றில் ரூ.7.85 கோடி மதிப்பு கொகைன் மாத்திரைகள்

0

ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த சில பிரஜைகள் போதைப்பொருள்களை பல்வேறு வழிகளில் இந்தியாவுக்கு கடத்தி வருகின்றனர். அதில் போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகளை விழுங்கி எடுத்து வருவது ஒரு வகையாகும். உகாண்டாவில் இருந்து வரும் ஒருவர் போதைப்பொருள் கடத்தி வருவதாக மும்பை விமான நிலைய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உகாண்டாவில் இருந்து வந்த ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். இதில் அவரிடம் போதைப்பொருள் எதுவும் இல்லை. ஆனால் அவர்தான் போதைப்பொருள் எடுத்து வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது.

இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகளை விழுங்கி இருப்பதை அந்த நபர் ஒப்புக்கொண்டார். உடனே அவரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்தனர். உடனே அவர் மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவரது வயிற்றில் இருந்த போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகள் அனைத்தையும் வெளியில் எடுத்தனர். மொத்தம் 65 மாத்திரைகள் இருந்தது.

அதில் 785 கிராம் கொகைன் போதைப்பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.7.85 கோடியாகும். அவர் மீது போலீஸார் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மும்பையில் யாரிடம் அந்த போதைப்பொருளை டெலிவரி செய்வதற்காக எடுத்து வந்தார் என்பது குறித்தும், இக்கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த மாதம் ஒன்றாம் தேதி மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை மாத்திரைகளை வயிற்றில் விழுங்கி எடுத்து வந்த போது பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க மும்பை விமான நிலையத்தில் சிக்கிய உகாண்டா பிரஜை... வயிற்றில் ரூ.7.85 கோடி மதிப்பு கொகைன் மாத்திரைகள்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top