புதுக்கோட்டை: வழக்கறிஞர்கள் போராட்டம்; பணியிடை மாற்றம்; பெண் எஸ்.ஐ தற்கொலை முயற்சி - நடந்தது என்ன?!

0

புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜாஸ்மின் வித்யா - ஆரோக்கியராஜ் என்ற தம்பதிக்கு இடையே குடும்பத் தகராறு இருந்து வந்திருக்கிறது. ஆரோக்கியராஜ் மீது அவரின் மனைவி வரதட்சணை தொடர்பான புகாரை சமூக நலத்துறை அலுவலகத்தில் கொடுத்திருந்தார். இதுதொடர்பான வழக்கிற்காக பெண்ணின் தரப்பில் வழக்கறிஞர் கலீல் ரகுமான் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது, ஆரோக்கியராஜ், கலீலை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், இதுதொடர்பாக, திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் கலீல் புகார் கொடுத்தார். ஆனால், போலீஸார் மனுமீது நடவடிக்கை எடுக்கவில்லை, ஆரோக்கியராஜை கைது செய்யவில்லை என்று கூறி கோர்ட் முன்பு சாலைமறியலில் ஈடுபட முயன்றனர்.

போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி உடனே உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, கலைந்து சென்றனர். ஆனால், போலீஸார் கூறியபடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே விசாரணை அதிகாரியான திருக்கோகர்ணம் காவல் நிலைய பெண் எஸ்.ஐ சங்கீதா நடவக்டிக்கை எடுக்காமல், கலீல் ரகுமானை தகாத வார்த்தைகளில் பேசியதாகக் கூறி அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று எஸ்.பி அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, சம்மந்தப்பட்ட எஸ்.ஐ சங்கீதா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாக உறுதியளித்தோடு, எஸ்.ஐ சங்கீதா ஆதனக்கோட்டை காவல் நிலையத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு பிறகு எஸ்.ஐ சங்கீதா மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. காவல் நிலையத்திற்கு வந்தவர் லீவு கேட்டதாகவும், அவருக்கு லீவு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே லீவு லெட்டரை ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார். வீட்டிற்கு சென்று படுத்தவர் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து, மயக்க நிலையில் இருந்த எஸ்.ஐ சங்கீதாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் வீட்டில் இருந்தவர்கள். எஸ்.ஐ சங்கீதா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்திருக்கிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவல் நிலையத்திற்கு எஸ்.ஐ வந்தபோது, என்னுடைய முடிவுக்கு வழக்கறிஞர்கள் போராட்டம் தான் காரணம். தவறு செய்யாத எனக்கு பணியிடை மாற்றம் கிடைத்திருக்கிறது. இனியாவது போலீஸாருக்கு நல்லது நடக்கட்டும்" என்று ஒரு குறிப்பினை அவர் எழுதி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செய்யாத தவறுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாலும், வக்கீல்கள் போராட்டத்தின் போது, தகாத வார்த்தைகளில் பேசியதால் தான் மனமுடைந்து எஸ்.ஐ மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.


மேலும் படிக்க புதுக்கோட்டை: வழக்கறிஞர்கள் போராட்டம்; பணியிடை மாற்றம்; பெண் எஸ்.ஐ தற்கொலை முயற்சி - நடந்தது என்ன?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top