மதுரை அதிமுக மாநாடு: நிரூபித்தாரா சறுக்கினாரா எடப்பாடி பழனிசாமி?!

0

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரமாண்ட மாநாட்டை எடப்பாடி அறிவித்ததும், கட்சியின் மொத்த நிர்வாகிகளையும் வேலை வாங்கத் தொடங்கினார் எடப்பாடி. உணவு, வரவேற்பு என ஓவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குழுக்களென மொத்தம் ஒன்பது குழுக்களை அமைத்தார் எடப்பாடி. ஆனால், உணவு விஷயத்தில் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்து வருவதோடு, அரசியல் ரீதியாக சில நல்ல வாய்ப்புகளை எடப்பாடி தவறவிட்டுவிட்டார் என்கிறார்கள் அ.தி.மு.க-வின் சீனியர்கள்.

மாநாட்டில் கொட்டப்பட்ட உணவு

தொடர்ந்து நம்மிடம் பேசிய சீனியர்கள், " எடப்பாடி இடைக்கால பொதுச் செயலாளரானர் ஆனபோதே, ஓ.பி.எஸ், சசிகலா, தினகரன் தரப்பினர், அ.தி.மு.க-வில் சமூக ரீதியான பிளவை ஏற்படுத்த முயன்றனர். அதனால்தான், கட்சியின் சீனியர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் தென் மாவட்டத்தில், குறிப்பாக மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தவேண்டும் என்று எடப்பாடியிடம் தெரிவித்தனர். ஆனால், அப்போது அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவே இல்லை. ஆனால் பொதுச் செயலாளர் ஆனப்பின்னர், மதுரையில் மிகப்பெரிய மாநாடு நடத்தவேண்டுமென்று எடப்பாடி தரப்பில் இருந்தே முன்மொழிப்பட்டது.

அதன்படிதான், ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் மாநாடு நடத்த முடிவானது. இதைத்தொடர்ந்து, மதுரை திருமங்கலம் தொகுதியில்தான் பெரிய அளவிலான இடமிருக்கிறது. இடத்தேர்வை நான் பார்த்துக் கொள்கிறேன் என ஆர்.பி.உதயக்குமார் தாமாகவே முன்வந்தார். ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூவும் அதற்கான வேலைகளை பார்த்தனர். ஆனால், மாநாடு தொடர்பான வேலைகள் தொடக்கத்தில் இருந்தே, கொங்கு பகுதியில் நிர்வாகிகளின் தலையீடு அதிகமாக இருந்தது. எடப்பாடியின் நிழலாக இருக்கும் வேலுமணி, தங்கமணி, இளங்கோவன் உள்ளிட்டோர் வீம்புக்கு ஏதாவது குறைச் சொல்லிக் கொண்டே இருந்தனர். மாநாட்டுக்கான குழுவில், தென் மாவட்ட எம்.எல்.ஏ-களுக்கும், மா.செ.க்களுக்கும் பிரதிநித்துவம் கொடுக்கப்படவில்லை என்பது சலசலப்பு ஏற்பட்டது. இதன் விளைவுதான் மாநாட்டில் உணவு, வரவேற்பு உள்ளிட்ட விவகாரங்களில் பிரதிபலித்தது.

மாநாட்டில் எடப்பாடி

குறிப்பாக, மாநாட்டில் பேசிய எடப்பாடி தொடக்கத்திலும், உரை முடிவிலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்கும் உதயகுமார், சீனியர் மாவட்ட செயலாளர்களான ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ உள்ளிட்டோரின் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்தது சர்ச்சையாகியிருக்கிறது. மதுரையில் பெரிய அளவில் கட்சி நிகழ்ச்சி நடந்தால், கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மதுரை செலுத்துவது வழக்கம். ஆனால், மாநாடு நடக்கும் முன்தினமே எடப்பாடி மதுரைக்கு வந்துவிட்டார். இதுகுறித்து அவரது தரப்புக்கு முன்கூட்டியே தெரிவித்தும், அதை அவர்கள் கண்டுக் கொள்ளவில்லை. ஏற்கனவே, பசும்பொன்னார் குரு ஜெயந்திக்கு எடப்பாடி நேரில் வராதது பிரச்னையாக இருக்கிறது.

ஓ.பி.எஸ் உள்ளிட்டோர், எடப்பாடி கட்சியை தனது சமூக ரீதியாக வழிநடத்துகிறார் என்ற பேசிவந்தனர். அதை சரிசெய்யவே மாநாடு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதை இந்த மாநாடு சரிசெய்யவில்லை என்பதை தாண்டி, விரிசலை விரிவுப்படுத்தி இருக்கிறது." என்றனர் விரிவாக. இதுஒருபுறமிருக்க எடப்பாடியின் பேச்சும் தொண்டர்கள் மத்தியில் பெரிய அளவில் எழுச்சியை ஏற்படுத்தவில்லை என்கிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட செயலாளர்கள் சிலரிடம் பேசினோம்.

எடப்பாடி பழனிசாமி

``இந்த மாநாட்டின் நோக்கம் என்பது ஓ.பி.எஸ், தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்டவர்களுக்கு எடப்பாடியின் ஆளுமை மற்றும் கட்சி அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை தெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் அடக்கம். அது நினைத்ததைவிட சிறப்பாகவே அமைந்துவிட்டது. அதேநேரத்தில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தயார்ப்படுத்தவேண்டிய பொறுப்பு எடப்பாடியாருக்கு உண்டு என்பதை அவர் மறந்துவிட்டார். திமுகவும், பாஜகவுக்கும் தேர்தல் வேலைகளை இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது.

இந்த சமயத்தில் இவ்வளவு பெரிய மாநாடு நடத்தியும் கட்சியை தேர்தலுக்கு எடப்பாடி ஆயத்தப்படுத்தவில்லை. அவரது பேச்சில் தேர்தல் வாடையே இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர்., அம்மா மற்றும் தனது தனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை சொல்லியே நேரத்தை வீணடித்துவிட்டதாகவே தொண்டர்கள் கருதுகிறார்கள். வெறும் 15 நிமிடம்கூட தி.மு.க அரசின் ஊழல்களை பேசவில்லை. வழக்கமான அவரது அறிக்கைகளை தொகுத்ததுபோலவே அவரது பேச்சு அமைந்துவிட்டது உண்மையில் துர்தஷ்டமானதுதான். பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்த தெளிவையும், அண்ணாமலையின் சர்ச்சை நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகவும் பேசி இருந்தால், தொண்டர்களும் நிர்வாகிகளும் தேர்தல் பணிகளை செய்ய வழிவகை செய்திருக்கும்.

எடப்பாடி

தலைமையே தேர்தலுக்கு இன்னும் ஆயத்தமாகவில்லை என்பதுதான் அவரது பேச்சு காட்டுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவோ அல்லது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவோ இனி இதுபோன்ற ஒர் மாநாடு நடத்த முடியாது. நல்லதோர் வாய்ப்பை எடப்பாடியே வீணடித்துவிட்டார்" என்றனர் யதார்த்தமாக...

மதுரை மாநாடு மூலமாக அமைப்பு ரீதியாக நான்தான் அதிமுகவின் ஆளுமை என்பதை எடப்பாடி நிருபித்துவிட்டார் என்பது எந்தளவுக்கு உண்மையோ... மாநாட்டில் பேச வேண்டிய அரசியலை பேசாமல் தொண்டர்களை உற்சாகப்படுத்தாமல் கோட்டைவிட்டுவிட்டார் என்பதே யதார்த்த உண்மை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!


மேலும் படிக்க மதுரை அதிமுக மாநாடு: நிரூபித்தாரா சறுக்கினாரா எடப்பாடி பழனிசாமி?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top