நமக்குள்ளே... பெண்கள் குறித்த இழிசொற்கள் நீக்குவோம்... மொழியை சுத்திகரிப்போம்!

0

பெண்கள்... உச்ச நீதிமன்றத்தை உச்சி முகரக்கூடியதொரு தருணமிது!

உலகின் உள்ள எல்லா மொழிகளுக்கும் உள்ள ஓர் ஒற்றுமை... பெண்கள் குறித்த இழிசொற்கள். எங்கெங்கும் அவை நீக்கமற நிறைந்திருக்கின்றன. அம்மாவைக் கேவலப்படுத்தும் ஒரு சொல், தமிழகத்தின் பெரும்பாலான ஆண்களின் வாய்களிலிருந்தும் காரணமே இல்லாமல் வெடுக்கென முதலில் வந்துவிழும் ‘சர்வதேசிய சொல்’ என்பதாகவே மாறிக்கிடக்கிறது. திரைப்படங்களிலும் சென்சாரே இல்லாமல் சர்வசாதாரணமாக பயன்படுத்தும் சொல்லாகிவிட்டது.

தினசரி வாழ்க்கையில் பெண்களைக் கீழ்மையாகவும், அசிங்கமாகவும் குறிக்கும் எத்தனை எத்தனையோ சொற்களை அனிச்சையாகவும், திட்டமிட்டும் பயன்படுத்தி வருபவர்கள்தான் நிறைந்திருக்கின்றனர். மெத்தப்படித்தவர்கள், மேதாவிகள், படைப்பாளிகள், அதிகாரமிக்கவர்களின் உலகில் இந்த சொற்களெல்லாம் சர்வசாதாரணம். ‘பெரிய மனிதர்கள்’ என்று சொல்லிக்கொள்பவர்கள்கூட, ‘இதுல என்ன இருக்கு?’ என்று எகத்தாளமாகவே கடக்கத்தான் செய்கிறார்கள்.

இத்தகைய இழிநிலையை மாற்றும் முயற்சியாக, ‘பெண்களைக் கீழ்மைப்படுத்தும் விதமான சொற்களை இனி நீதிமன்றங்களில் பயன்படுத்தக் கூடாது’ என்று தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ஆணாதிக்க வார்த்தைகளான `கீழ்ப்படிதலுள்ள மனைவி’, `விபச்சாரி’, `ஹவுஸ் வொய்ஃப்’, ‘தந்தை பெயர் தெரியாத குழந்தை’ போன்ற சொற்கள், நீதியறைகளில்கூட இயந்திரத்தனமாக பயன்படுத்தப்படுகின்றன. இது, அப்பெண்கள் குறித்த முன்முடிவுகளுடன் வழக்கை அணுக வைக்கும், நீதி வழங்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அழுத்தமாகத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், பாலின பேதத்தாலும் ஆணாதிக்கத்தாலும் உருவாக்கப்பட்ட இதுபோன்ற சொற்களைக் களையும் கையேட்டையும் வெளியிட்டிருப்பது... மிக மிக முக்கியமானதொரு முன்னெடுப்பு.

எல்லா மொழிகளிலும் ‘கெட்ட வார்த்தைகள்’ என்பவை, பெண்களின் ‘நடத்தை’யைச் சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கின்றன; பெண் உறுப்பையே வசைச் சொற்களாக உருவாக்கியிருக்கிறது வக்கிரம்பிடித்த இந்த உலகம். அலுவலகம் உள்ளிட்ட மொழி கடிவாளம் உள்ள இடங்களில்கூட, பெண்களைக் குறிப்பிடும் விதத்திலும், விகுதிகளிலும் அலட்சியமும், ஆதிக்கமுமே நிலவுகிறது. ஒரு பெண்ணை, அவர் மாநில முதல்வரே ஆனாலும், ‘அவ...’ என்றே குறிப்பிட்டுப் பேசுவதும், ‘வேலைக்காரி’, ‘சமையற்காரி’ போன்ற விகுதிச் சொற்களும் பலரின் அன்றாடங்களிலும் கலந்துள்ளது. மொழிக்கே உரிய துறைகளான இலக்கியம், இதழியல் போன்றவற்றிலும்கூட, பாலியல் பேதமற்ற சொற்கள் இன்னும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரவில்லை.

ஆசிரியருக்குப் பெண்பாலினச் சொல்லாக ஆசிரியை என்பதை பயன்படுத்தாமல், பெண் ஆசிரியர் என்றும் குறிப்பிடாமல், ‘ஆசிரியர்’ என்றே குறிப்பிடுவோம். இனி... பெண் இயக்குநர், பெண் மருத்துவர், பெண் அரசியல்வாதி, பெண் விமானி என்று யாரும் இல்லை. இயக்குநர், மருத்துவர், அரசியல்வாதி, விமானி...

தோழிகளே... இப்போது, இப்போதாவது நாம் செய்ய வேண்டியது, இப்படி பாலின பேதமற்ற மொழியைக் கையாள ஆரம்பிப்பதுதான், கற்றுக்கொடுப்பதுதான்!

களமாடுவோம்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

அடுத்த இதழ்...

மேலும் படிக்க நமக்குள்ளே... பெண்கள் குறித்த இழிசொற்கள் நீக்குவோம்... மொழியை சுத்திகரிப்போம்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top