ஊழல் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கை சொல்லவில்லை என்ற அண்ணாமலையின் கருத்து சரியா? - ஒன் பை டூ

0

இனியன் ராபர்ட், மாநில செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்

``அண்ணாமலையின் இந்தக் கருத்து மிகவும் அபத்தமானது. பா.ஜ.க அரசின் மாபெரும் ஊழலை சி.ஏ.ஜி-யின் அறிக்கை புட்டுப் புட்டு வைத்திருக்கிறது. மத்திய அரசின் ஏழு திட்டங்களில், பெரும் முறைகேடுகளைத் திட்டமிட்டு பா.ஜ.க அரசு நிகழ்த்தியிருப்பதை அந்த அறிக்கையைப் படிக்கும் சாமானியர்கள்கூடப் புரிந்துகொள்ள முடியும். மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள், ராமாயணத்தின் பெயரைச் சொல்லி ஊழல் செய்திருக்கிறார்கள். துவாரகா சாலைத் திட்டத்தில் 1 கி.மீ சாலை அமைக்க 250 கோடி செலவானதாகக் கணக்கு காட்டியிருக்கிறார்கள். சுங்கச்சாவடியில் கோடிக்கணக்கில் முறைகேடாக வசூல் செய்திருக்கிறார்கள். இவ்வளவு ஏன், இறந்துபோன பொதுமக்களின் பெயரைச் சொல்லி, அவர்களுக்குச் சிகிச்சை அளித்ததாகச் சொல்லி, அதற்கு மருத்துவக் காப்பீடும் வழங்கியதாகப் பல கோடி ரூபாய் மக்கள் பணம் சுருட்டப்பட்டிருக்கிறது. ‘எங்கள்மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டையாவது சுமத்த முடியுமா..?’ என மார்தட்டிக்கொண்ட பா.ஜ.க-வின் ஊழல் முகத்தை சி.ஏ.ஜி அறிக்கை கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறது. அதற்கு பதில் சொல்ல துப்பில்லாமல், ‘அறிக்கையில், ஊழல் நடந்திருப்பதாகச் சொல்லவில்லை’ என மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.”

இனியன் ராபர்ட், நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

``ஆம், அண்ணாமலை சொன்னது சரிதான். சி.ஏ.ஜி அறிக்கையில், ஊழல் நடந்திருப்பதாகக் குறிப்பு இல்லை. மத்திய அரசின் நிதிச் செலவினங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு, கணக்கீடு செய்திருக்கிறது சி.ஏ.ஜி. உதாரணமாக, துவாரகா சாலை அமைக்கும்போது மேம்பாலங்கள், ஈரடுக்கு மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைத்ததோடு, 2 லட்சம் மெட்ரிக் டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதை சி.ஏ.ஜி கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரையிலான எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டத்தின் தூரம் 20 கி.மீதான். அதன் திட்ட மதிப்பு 5,721 கோடி ரூபாய். அப்படியானால் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.286 கோடிக்கு செலவு மதிப்பீடு ஆகும்தானே... அதை ஊழல் என்றா சொல்ல முடியும்... இது போன்று பல்வேறு குழப்பங்கள் சி.ஏ.ஜி அறிக்கையில் இருக்கின்றன. அதற்கான தகுந்த விளக்கத்தை சி.ஏ.ஜி-க்கு மத்திய அரசு அளிக்கும். எப்போதும் ஊழலைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகள், `பா.ஜ.க எப்போது சறுக்கும்... அதைவைத்து ஊழல் பழி சுமத்திவிடலாம்’ என்று நினைக்கின்றன. மீண்டும் ஒரு முறை அவர்கள் ஏமாந்துவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்!”

- லெ.ராம் சங்கர்ஒனெ ஐ டுஇ


மேலும் படிக்க ஊழல் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கை சொல்லவில்லை என்ற அண்ணாமலையின் கருத்து சரியா? - ஒன் பை டூ
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top