டெலிவரி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் - தமிழக அரசின் முடிவும் நன்மைகளும்!

0

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டு அவர் பேசுகையில், “சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் இன்று நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று உள்ளது. ஓலா, ஊபர், ஸ்விகி, சோமோட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம். நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நலவாரியம் ஒன்று அமைக்கப்படும் என்பதையும் இன்று (ஆக 15) அறிவிக்கிறேன்” என்று கூறினார்.

அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவில் ஸ்விகி, சோமோட்டோ போன்ற உணவு விநியோக சேவை, ரேபிடோ, ஊபர், ஓலா போன்ற டாக்ஸி சேவை தளங்களில் பணிபுரியும் பணியாளர்களின் நலனுக்காக ‘கிக்’என்கிற அமைப்பு இயங்கி வருகிறது. கர்நாடகா மாநில தேர்தலுக்கு, வாக்கு சேகரிக்க வந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ‘கிக்’ பணியாளர்களை சந்தித்துடன், அவர்களுக்கான நலவாரியம் தொடங்கி மற்றும் சலுகைகள் ஏற்படுத்தப்படுமென உறுதியளித்தார். அதன்பின், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், இந்த பணியாளர்களின் நலனுக்காக நாட்டில் முதல் முறையாக, 4 லட்சம் ரூபாயில் விபத்து மற்றும் உயிர் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மூன்று வாரங்களுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலம் ‘கிக்’ பணியாளர்களுக்கு தனியான நலவாரியம் அமைக்கப்படுமென மசோதா நிறைவேற்றியுள்ளது.

கிக் பணியாளர்களுடன் ராகுல் காந்தி

ராஜஸ்தான் அரசின் இந்த முடிவு தேசிய அளவில் ‘கிக்’ பணியாளர்களின் நலனுக்கான முதல் முயற்சியாக கருதப்படுகிறது. இப்படியான நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், உணவு, இதர பொருட்கள் விநியோகம், டாக்ஸி சேவை பணியாளர்களுக்காக தனியான நலவாரியம் அமைக்கப்படுமென அறிவித்துள்ளார். ‘கிக்’ பணியாளர்கள் வகையில் பலதரப்பட்ட முறைசாரா பணியாளர்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் உணவு டெலிவரி தளங்களான ஸ்விக்கி, சோமோட்டோ, டன்சோ போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், மருந்து மற்றும் இதர பொருட்கள் விநியோகம்; ரேபிடோ, ஊபர் போன்ற டாக்ஸி சேவை செய்யும் நபர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

food delivery

மத்திய அரசின் நிதி ஆயோக் 2022 ஜூன் மாதம் எடுத்த கணக்கெடுப்பின் படி, உணவு விநியோகம், டாக்ஸி சேவை, பகுதி நேரமாக சேவைகள் வழங்குவோர் என ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் மொத்தம் 77 லட்சம் பேர் ‘கிக்’ பணியாளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 2030-ம் ஆண்டுக்குள் ‘கிக்’ பணியாளர்களின் எண்ணிக்கை 2.35 கோடி பேராக உயரக்கூடும் என அறிவித்துள்ளது. 77 லட்சம் அளவுக்கான ‘கிக்’ பணியாளர்கள் இருந்தும், இந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட இவ்வகை பணியாளர்கள் எந்த வகையிலும் முறைப்படுத்தப்படாத முறைசாரா பணியாளர்களாகவே உள்ளனர். உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகம், டாக்ஸி பணி செய்யும் ‘கிக்’ பணியாளர்கள் தங்களை முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களாக மாற்றி, தொழிலாளர் நலத்துறையின் அடிப்படையான சலுகைகளையாவது வழங்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ‘கிக்’ அமைப்பினர் சிலர், “எங்கள் குறைகளை கேட்க இதுவரை எந்த அமைப்பும் இருந்ததில்லை. நலவாரியம் அமைப்பதால், எங்களுக்கான நியாயமான கூலி, தொடர்ச்சியான பணி மற்றும் திடீரென வேலை பறிப்பு சம்பவங்களை அரசு தடுத்து நிறுத்தும் என நம்புகிறோம். தற்போது, நாங்கள் நியாயமான கூலி கேட்டு போராட்டம் நடத்தினால் கூட, எங்கள் நிறுவனம் எங்கள் ‘ஐ.டியை பிளாக்’ செய்து எங்கள் பணியை பறிக்கின்றனர். ராஜஸ்தானை தொடர்ந்து தமிழக அரசும் ‘கிக்’ பணியாளர்களுக்காக நலவாரியம் அமைக்கப்படுமென அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

இந்திய அளவில் ‘கிக்’ பணியாளர்களின் குறைகள் கேட்டு சரிசெய்ய எந்த ஒரு அரசு அமைப்பும் இல்லை என்பது தான் வருத்தத்துக்குறியது. ஏனெனில் ‘கிக்’ பணியாளர்கள் அரசின் எந்தவொரு தொழிலாளர் நலவாரியத்திலும் பதிவு செய்யப்படாமல் உள்ளனர். இதனால், மற்ற சாதாரண பணியாளர்களுக்கு கிடைக்கும் வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, உதவித்தொகை, ஓய்வூதியம் என எந்தவொரு அடிப்படை தொழிலாளர் நலச்சட்டத்தின் உரிமைகளும், சலுகைகளும் கிடைப்பதில்லை” என்றனர்.

இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பேசினோம், “தமிழகத்தில் உள்ள பல தொழிலாளர்களின் நலனை காக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகம் செய்யும் பணியாளர்களுக்காக நலவாரியம் அமைப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது முதற்கட்ட அறிவிப்பு தான். இனி துறை சார்ந்த ஐ.ஏ.எஸ் அளவிலான அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, இந்தப்பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நலவாரியத்தின் செயல்பாடுகளை தீர்மானிப்போம்” என்றார்.


மேலும் படிக்க டெலிவரி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் - தமிழக அரசின் முடிவும் நன்மைகளும்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top