அதிமுக மாநாடு நடக்கும் நாளில் நீட் போராட்டத்தை அறிவித்துள்ள திமுக - காரணம் பதற்றமா... பின்னணி என்ன?!

0

ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் அ.தி.மு.க பொன்விழா மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதேநாளில் அனைத்து மாவட்ட தலைநகரிலும் நீட் தேர்வு விவகாரம் மற்றும் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என தி.மு.க அறிவித்திருப்பதே தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக்.

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகத் தேர்வான பிறகு அ.தி.மு.க நடத்தும் முதல் மாநாடு இதுவே. மாநாடு குறித்தான அறிவிப்பைக் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட்டு பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார் எடப்பாடி. மறுபக்கம் நீட் விலக்கு மசோதாவுக்கு விலக்கு அளிக்க முடியாதென ஆளுநர் பேசியதாலும், நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தும் மருத்துவ சீட் கிடைக்காத நிலையில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் எனும் மாணவனும் அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

நீட் - ஆளுநர் ஆர்.என்.ரவி

இதனையடுத்து நீட் விலக்கில் மத்திய அரசும் ஆளுநரும் முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி ஆகஸ்ட் 20-ம் தேதி தி.மு.க சார்பில் மாவட்டம்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென ஆகஸ்ட் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் மாநாடு நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள இடம் மதுரை விமான நிலையத்துக்கு அருகில் உள்ளது. மாநாட்டில் பங்கேற்கும் கட்சியினர் பட்டாசு வெடிப்பதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடும் என்பதால் மாநாடு நடத்திடத் தடை விதிக்க வேண்டுமென காரைக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழக்குத் தொடுத்திருக்கிறார். அதனை நீதிமன்றமும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிமுக மாநாடு

லட்சக் கணக்கில் தொண்டர்களைத் திரட்டி அ.தி.மு.க நடத்தும் மாநாட்டின் மீதான கவனத்தைத் திசைதிருப்பவே உண்ணாவிரத அஸ்திரத்தைக் கையிலெடுத்திருக்கிறது தி.மு.க என அதிமுக வட்டாரங்கள் விமர்சித்து வரும் நிலையில் அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் சசிரேகாவிடம் பேசினோம், ``அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறும் எனப் பல மாதங்களுக்கு முன்பே நாங்கள் அறிவித்திவிட்டோம்.

தமிழ்நாடு முழுவதிலுமிருந்து அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் லட்சக் கணக்கில் பங்கேற்க ஆயத்தமாகி வருவதைக் கண்டு திமுக அஞ்சுகிறது என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் இருக்க முடியாது. அதிமுக மாநாடு மக்கள் மத்தியில் கவனம்பெற்று பெற்று வெற்றியடைந்துவிடும் என்ற பதற்றமே காரணம். அதிலும் நீட் தேர்வு தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களாம். ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டதே. இதுவரை தூங்கிக் கொண்டிருந்தார்களா.

சசிரேகா

இப்போதுதான் நீட் தேர்வு நடந்து வருகிறதெனத் தெரிய வந்ததா இவர்களுக்கு. ஆட்சிக்கு வருவதற்கு முன் எங்களுக்கு ரகசியம் தெரியும். நாங்கள் வந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்துவிடும் என ஏக வசனம் பேசிவிட்டு, இப்போது ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என மக்களை ஏமாற்றுகிறார்கள்” எனச் சாடிய அவர், ``மாநாட்டுக்குத் தடைகோரிய வழக்கு பொறுத்தவரை அது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க-வின் தூண்டுதல் காரணமாகப் போடப்பட்டுள்ள வழக்குதான். அதனை உறுதியாக நீதிமன்றம் தள்ளுபடி செய்யும். மக்கள் எழுச்சியுடன் அதிமுக பொன்விழா மாநாடு சிறப்பாக நடப்பதை யாராலும் தடுக்க இயலாது” என்றார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க தி.மு.க பிரமுகர் அமுதரசனிடம் பேசினோம்... ``நீட் தேர்வில் விலக்கு கேட்டும், ஆளுநரின் திமிர் பேச்சைக் கண்டித்தும் திமுக சார்பில் இளைஞரணி, மருத்துவரணி மற்றும் மாணவரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம். குறிப்பாக மாணவரணியினர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் கல்லூரி செல்வோர், பணிக்குச் செல்வோருக்கு எந்த இடையூறும் வராமல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தத் தி.மு.க திட்டமிட்டுள்ளதே தவிர வேறெந்த காரணமுமில்லை. அ.தி.மு.கவினர் தாங்கள் நடத்தும் மாநாடு தோல்வியடையப்போவதால் இப்போதே காரணம் தேட ஆரம்பித்துவிட்டனர்.

அமுதரசன்

சொல்லப்போனால் நீட் தேர்வை தமிழகத்துக்குள் அனுமதித்ததே அதிமுக தான். மாநில உரிமையை மோடியிடம் அடமானம் வைத்த அதிமுக உரிமைக்காகப் போராடிவரும் திமுக-வை விமர்சிக்க என்ன அருகதை இருக்கிறது. நீதிமன்ற வழக்கு விவகாரத்தில் திமுக-வைக் குறை சொல்கிறார்களே... நீதிமன்றத்தை திமுக ஒன்றும் நடத்தவில்லையே. யாரோ ஒரு தனிநபர் தொடர்ந்த வழக்கை திமுக தொடர்ந்தது எனச் சொல்வது அர்த்தமற்றது. திமுக-வை விமர்சித்தால்தான் நம்மைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என எதற்கெடுத்தாலும் திமுக-வை இழுக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.” என்றார்.


மேலும் படிக்க அதிமுக மாநாடு நடக்கும் நாளில் நீட் போராட்டத்தை அறிவித்துள்ள திமுக - காரணம் பதற்றமா... பின்னணி என்ன?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top