`டிஐஜி மனைவியின் சித்திரவதை’ - ரயிலில் தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர் - இரு கால்களையும் இழந்த சோகம்

0

ஒடிசாவைச் சேர்ந்த பெண் ஹோம் கார்ட், ரயிலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதில் இரண்டு கால்கள் துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் வட மத்திய ரேஞ்ச் டிஐஜி பிரிஜேஷ் குமார் ராய் வீட்டில் ஹோம் கார்டாக பணியாற்றுபவர் சவுரித்ரி சாஹு. "மூத்த டிஐஜி அதிகாரியின் மனைவி, எனது வேலையைச் சரியாகச் செய்யத் தவறினால், திட்டி, அடித்தது அவமானப்படுத்தினார்.

காவல்துறை

இது தொடர்பாக ஆளுநர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பல அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த நிலையில், அவர் நேற்று ரயிலில் விழுந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சவுரித்ரி சாஹு தனது இரண்டு கால்களையும் இழந்துவிட்டார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக பேசிய டி.ஐ.ஜி பிரிஜேஷ் குமார் ராய், "அங்குல் மாவட்டத்தைச் சேர்ந்த சவுரித்ரி சாஹு என்ற பெண் ஹோம் கார்டுக்கு அவரின் குடும்பப் பிரச்னைகளால் தொந்தரவு இருந்தது. அதனால் அவர் மனநிலை சரியில்லாமல் இருந்தார். அவரை எனது மனைவி துன்புறுத்தவில்லை" எனக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஒடிசாவின் ஹோம் கார்டு டி.ஜி சுதன்ஷு சாரங்கி, "பாதிக்கப்பட்ட பெண் ஆகஸ்ட் 4-ம் தேதி, டிஐஜி வீட்டுத் துணிகளைத் துவைக்க முடியாததால் அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளி அடித்ததாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

காவல்துறை

ஆனால் இதுகுறித்து காவல்துறையில் எந்தப் புகாரையும் அளிக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும். தற்போது சவுரித்ரி சாஹு கட்டாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய மருத்துவச் செலவை அரசே ஏற்கும். பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் அவருடன் பேசுவோம். அதன்பின், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

சவுரித்ரி சாஹுவின் மகள் சுசிஸ்மிதா செய்தியாளர்களிடம், "எனது தாயின் தற்கொலை முயற்சிக்குக் காரணம் குடும்பப் பிரச்னையல்ல. அதிகாரியின் மனைவியால் தமக்கு அளிக்கப்பட்ட சித்திரவதையால் எனது தாய் மனமுடைந்து புலம்புவார். மன அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல், தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு இவ்வாறு செய்திருக்கிறார்" எனத் தெரிவித்திருக்கிறார்.


மேலும் படிக்க `டிஐஜி மனைவியின் சித்திரவதை’ - ரயிலில் தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர் - இரு கால்களையும் இழந்த சோகம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top