``ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கை கொடூரமான முறையில் முடிந்தது!" - சோனியா காந்தி

0

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்தநாள் தினமான நேற்று, ராஜீவ் காந்தியின் அரசியல் மிகக் கொடூரமான முறையில் முடிந்ததாக, அவரின் மனைவியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி கூறியிருக்கிறார். முன்னதாக, ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியிலுள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Rajiv Gandhi | ராஜீவ் காந்தி

அதையடுத்து, டெல்லியில் நடைபெற்ற 25-வது ராஜீவ் காந்தி தேசிய சத்பவனா விருது வழங்கும் நிகழ்ச்சியில், சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில், 2020-21 ஆம் ஆண்டுக்கான 25வது ராஜீவ் காந்தி தேசிய சத்பவனா விருதை, ராஜஸ்தானிலுள்ள பெண்களுக்கான குடியிருப்பு நிறுவனமான பனஸ்தாலி வித்யாபீடத்துக்கு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் எம்.ஹமீத் அன்சாரி வழங்கினார்.

அதைத்தொடந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய சோனியா காந்தி, ``ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கை கொடூரமான முறையில் முடிந்தது. ஆனாலும் அவர், மிகக் குறுகிய காலகட்டத்திலேயே பல உச்சங்களைத் தொட்டார். நாட்டின் பன்முகத்தன்மையில் மிகவும் கவனம் செலுத்தினார். அதோடு, நாட்டுக்கு சேவை செய்யக் கிடைத்த நேரங்களிலெல்லாம் பல எண்ணற்ற சாதனைகளைச் செய்தார். பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தார். பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று அவர் போராடினார்.

சோனியா காந்தி

இன்றைக்கு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமைப்புகளில் 15 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர் என்றால், அதற்கு ராஜீவ் காந்தியின் கடின உழைப்பும், தொலைநோக்கு பார்வையும் தான் காரணம். மதம், இனம், மொழி, கலாசாரம் ஆகியவற்றைக் கொண்டாடுவதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையை பலப்படுத்த முடியும் என்பதில் அவர் மிகவும் நம்பிக்கையுடையவர்" என்று கூறினார்.

1984-ல், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலைசெய்யப்பட்ட பிறகு, பிரதமராகப் பதவியேற்ற அவரின் மகன் ராஜீவ் காந்தி, 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க ``ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கை கொடூரமான முறையில் முடிந்தது!" - சோனியா காந்தி
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top