Doctor Vikatan: ஒற்றைத் தலைவலி, நீர்கோத்தல்... சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?

0

Doctor Vikatan: என் வயது 35. கடந்த வருடம் இரண்டாவது குழந்தை பிறந்தது. அதற்குப் பிறகு எனக்கு அடிக்கடி தலை பாரமாக இருப்பதாகவும், நீர் கோத்தது போலவும் உணர்கிறேன். ஒற்றைத் தலைவலியும் வாந்தியும் வருகிறது. சித்த மருத்துவத்தில் இதற்கு ஏதேனும் நிரந்தர சிகிச்சை உண்டா?

- Bhavani Priya, விகடன் இணையத்திலிருந்து.

சித்த மருத்துவர் வரலட்சுமி

சைனஸ் காரணமாகவும் இப்படிப்பட்ட வலி வரலாம். தலையில் ஒரு பக்கம் வலி வரும். வாந்தி வரும். சத்தமோ, வெளிச்சமோகூட வலியை தீவிரப்படுத்தும். நிம்மதியாகத் தூங்கவோ, சாப்பிடவோ முடியாது. வாந்தி எடுத்தால்தான் நிம்மதியாக உணர முடியும்.

சித்த மருத்துவத்தில் இந்தப் பிரச்னைக்கு வெளிப் பிரயோகமாகப் பயன்படுத்தும் மருந்துகளும் உள்ளன. உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் உள்ளன.

மூலிகை இலைச்சாற்றை மூக்கில் சொட்டுகளாக விடுவது நசிய முறை எனப்படும். சுக்குத்தைலத்தை இரண்டு நாசித் துவாரங்களிலும் நசியமாக விடலாம். தும்பை இலைச்சாறு அல்லது நொச்சி இலைத் தைலத்தையும் தலா இரு சொட்டுகள் விடலாம்.

ஓமத்தை நன்கு இடித்து துணியில் மூட்டையாகக் கட்டி, அடிக்கடி அதை மோந்து பார்க்கலாம். ஓமவல்லி இலைகளைக் கசக்கி தலையில் வலி உள்ள இடங்களில் தேய்த்து விடலாம். அதையும் மோந்து பார்க்கலாம். இப்படிச் செய்யும்போது சைனஸ் பாதை சுத்தமாகி, வீக்கம் குறைந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சித்த மருந்துக் கடைகளில் நீர்க்கோவை மாத்திரை என கிடைக்கும். அதை வாங்கி, பால் அல்லது வெந்நீரில் இழைத்து நெற்றி, கன்னங்கள் என நீர்கோத்த பகுதிகளில் பற்று போல போடலாம். ஓமத்தை வெதுவெதுப்பான பாலில் ஊறவைத்து அரைத்து, பற்று போடலாம்.

சித்த மருத்துவம்

வெற்றிலையில் தேங்காய் எண்ணெய் தடவி லேசாக வாட்டி, வலி உள்ள இடங்களில் ஒத்தடம் போல கொடுக்கலாம். 10 வேப்பிலைகள், ஒரு நெல்லிக்காய், ஒரு துண்டு இஞ்சி, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் எல்லாவற்றையும் சிறிது தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடிக்கலாம்.

ஓமவல்லி இலைகள் 5, மிளகு 10, பூண்டு 3- 4 பல் ஆகியவற்றை நீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். அதேபோல ஓமம், வெந்தயம் தலா அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், இஞ்சி சிறு துண்டு ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

இவற்றை எல்லாம் தாண்டி, மனம் அமைதியாக இருக்க வேண்டியது மிக முக்கியம். அதற்கு யோகா உதவும்.

மூச்சுப் பயிற்சி

யோகநித்ரா எனப்படும் சவாசனத்தை தினமும் இரு முறை செய்வது மைக்ரேன் பிரச்னையின் தீவிரத்தில் இருந்து காக்கும். தியானமும் மூச்சுப்பயிற்சியும்கூட பெரிய அளவில் உதவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: ஒற்றைத் தலைவலி, நீர்கோத்தல்... சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top