How To: நீரிழிவு நோய் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி? |How To Recognize The Symptoms Of Diabetes?

0

சர்க்கரை நோய் என நாம் அழைக்கும் நீரிழிவு நோயை, முந்தைய காலத்தில் பணக்கார வியாதி என்று சொல்வார்கள். ஏனென்றால் பெரிய அளவில் உடல் உழைப்பில்லாத, வசதி படைத்தவர்கள்தான் அதிகளவில் நீரிழிவுக்கு ஆட்பட்டதால் அப்படியாகக் கூறப்பட்டது. ஆனால், இன்றைக்கு அந்த நிலை முற்றிலுமாக மாறி வயது வேறுபாடு, வர்க்க வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் நீரிழிவுக்கு ஆளாகலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. வருமுன் காப்பதே சிறந்தது என்கிற தாரக மந்திரம் அனைத்து நோய்களுக்கும் பொருந்தக்கூடியது. எந்த நோயாக இருந்தாலும் முடிந்தவரை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்துவது எளிது.

நீரிழிவு நோய் மருத்துவர் முத்துக்குமரன் ஜெயபால் | சென்னை

அந்த வகையில், நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி என்பதை, சென்னையைச் சேர்ந்த நீரிழிவு நோய் மருத்துவர் முத்துக்குமரன் ஜெயபாலிடம் கேட்டோம்…

``வழக்கத்துக்கு மாறாக அதிக தாகம் எடுப்பது, அதிக அளவில் சிறுநீர் கழிப்பது மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக அளவில் பசி எடுப்பது, சாப்பிட்ட உடனேயே தூக்கம் வருவது அல்லது தலைசுற்றல் மற்றும் அரை மயக்க நிலைக்குச் செல்வது என நிறைய அறிகுறிகள் இருக்கின்றன. திடீரென எடை அதிகரிப்பது அல்லது குறைவது ஆகிய இரண்டுமே கூட நீரிழிவின் காரணமாக நடக்கும். ரத்த சர்க்கரை அளவு 200 என்கிற அளவில் இருந்தால் உடல் எடை கூடவும், 300க்கும் அதிகமாக இருந்தால் உடல் எடை குறையவும் வாய்ப்பிருக்கிறது.

கால் பகுதிகளில் எரிச்சல் மற்றும் குடைச்சல், சில நேரங்களில் பார்வை தெளிவில்லாமல் போவது, தோல் அரிப்பு, உடலில் ஏற்படும் காயங்கள் ஆறாமல் இருப்பது, அதாவது ஒரு வாரத்தில் ஆற வேண்டிய காயம் இரண்டு வாரங்களைக் கடந்த பின்பும் ஆறாமல் இருப்பது... இவையெல்லாம் இருந்தால் சந்தேகப்படலாம். மேற்சொன்ன இந்த அறிகுறிகள் நமக்கு வெளிப்படையாகத் தெரிபவை. இன்னும் 50 சதவிகித அறிகுறிகள் நமக்குத் தெரியாமலேயே இருக்கும்.

நீரிழிவு நோய்

இதன் காரணமாகத்தான் இது போன்ற சில அறிகுறிகள் தென்படும்போதே ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துப் பார்ப்பது நல்லது என்கிறோம். நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகிய மூன்றையும் `சைலன்ட் கில்லர்ஸ்’ என்று கூறுவோம். ஏனென்றால், இவை நாள்பட்ட வியாதியாக இருந்து உடலின் மற்ற உறுப்புகளையும் பாதிக்கும். உங்களுக்குத் தெரியாமலேயே ரத்த சர்க்கரை 200-க்கு மேல் உங்களுக்கு இருக்கிறது என்றால் 5 ஆண்டுகளில் நீங்கள் 60% நரம்பு பாதிப்புக்கு ஆளாகியிருப்பீர்கள். நரம்பு மட்டுமல்ல... சிறுநீரக பாதிப்பு, கண் பாதிப்பு ஆகியவையும் நீரிழிவின் காரணமாக ஏற்படும். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கான சாத்தியத்தை நீரிழிவு அதிகப்படுத்தும்.

இப்படியான நிலையில் தொடக்கத்திலேயே நீரிழிவைக் கண்டறிவதன் மூலம், இதுபோன்ற பாதிப்புகளையெல்லாம் தவிர்க்க முடியும். ஆரம்பத்திலேயே கண்டறிவதன் இன்னொரு சாதகம் என்னவென்றால் மருந்தில்லாமலேயே ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து குணப்படுத்த முடியும். முறையற்ற உணவுப் பழக்கம், தூக்கமின்மை மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களின் விளைவாகத்தான் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

உடல் எடை | மாதிரிப்படம்

எனவே நீரிழிவை ஆரம்பத்திலேயே கண்டறிகையில் டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் 5 – 8 சதவிகித உடல் எடையைக் குறைக்கச் சொல்வோம். சரியான உணவுப் பழக்கம் மற்றும் நேரத்துக்கு தூக்கம் என வாழ்க்கை முறையை ஒழுங்குப்படுத்துவதன் மூலம் நீரிழிவை குணப்படுத்த முடியும்.

மரபு வழியே நீரிழிவுக்கு ஆளாகுபவர்களுக்குக் கூட இது போன்ற முறையான வாழ்வியல் மாற்றத்தின் வழியாக நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். இது போன்ற நன்மைகள் பலவும் இருப்பதால் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் பரிசோதனைக்குச் செல்லுங்கள்” என்கிறார் முத்துக்குமரன் ஜெயபால்.


மேலும் படிக்க How To: நீரிழிவு நோய் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி? |How To Recognize The Symptoms Of Diabetes?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top