I.N.D.I.A: `தொகுதி பங்கீடு, செப். 30-ல் இறுதி முடிவு!’ - மும்பை கூட்டமும் அரசியல் நகர்வுகளும்!

0

28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்திற்கு நேற்று பிற்பகல் வரை எதிர்க்கட்சி தலைவர்கள் வந்துகொண்டிருந்தனர். மாலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆரம்பக்கட்ட கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் இன்று(செப் 1) என்ன அம்சங்கள் குறித்து பேசலாம் என்பது குறித்தும், மத்திய அரசு திடீரென எந்த ஆலோசனையும் செய்யாமல் நாடாளுமன்றத்தின் அவசரக்கூட்டம் இம்மாதம் 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவித்து இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி, சரத்பவார், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், ஒமர் அப்துல்லா உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் இன்று நடைபெற இருக்கும் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு அமைப்பாளர்/ ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பு குழுவை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தலைவர்கள் தெரிவித்தனர்.

நேற்றைய கூட்டத்தில், மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து வரும் 30-ம் தேதி இறுதி முடிவு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதோடு கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில் தொகுதி பங்கீடு செய்வது என்று நேற்று முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இக்கூட்டம் குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில், ``இந்தியா கூட்டணிக்கு ஒரு அமைப்பாளர், ஒருங்கிணைப்பு குழு தேவை. இப்போது நடப்பது போல் ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கூடி பேசிக்கொண்டிருக்க முடியாது. ஒருங்கிணைப்பு குழு அடிக்கடி கூடி பேசினால் மிகவும் சிறப்பாக இருக்கும்” என்றார்.

இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என்று கேட்டதற்கு, ``பிரதம வேட்பாளரை இப்போது அறிவிக்கவேண்டாம் என்று நினைக்கிறேன். தேர்தலுக்கு பிறகு முடிவு செய்துகொள்ளலாம்” என்றார். உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயும் பிரதம வேட்பாளர் குறித்து பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

சிவசேனா(உத்தவ்) தலைவர்களில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதி அளித்த பேட்டியில், ``2024-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கு பயனளிக்கும் வகையில் மும்பை கூட்டத்தில் யுக்தி வகுக்கப்படும். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இன்று புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது” என்றார்.

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அளித்த பேட்டியில், ``நாட்டின் ஒற்றுமை, இறையாண்மையை வலுப்படுத்துவது அவசியம். வறுமை ஒழிப்பு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் நலன் பிரச்னைக்கு தீர்வு காண மோடி அரசு தவறிவிட்டது. எதிர்க்கட்சி தலைவர்களின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் குறைந்த பட்ச செயல் திட்டம் குறித்து விவாதிக்கப்படும். பா.ஜ.க-வுக்கு எதிராக பொது வேட்பாளரையும் நிறுத்துவோம்” என்றார்.

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் அளித்த பேட்டியில், ``இந்தியா கூட்டணி நாட்டை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க.வெற்றி பெறாத மாநிலங்கள் துன்புறுத்தப்படுகின்றன. கூட்டணி என்பது எண்ணிக்கையை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ அல்ல. நாட்டை பாதுகாக்க...” என்றார்.

சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, ``பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டத்திற்கு காரணமான நரேந்திர மோடி அரசின் கொள்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்வதில் இந்தியா கூட்டணி சவாலை எதிர் கொண்டுள்ளது” என்று தெரிவித்தார். இன்று பத்திரிகையாளர் சந்திப்பு, கூட்டணி தலைவர்கள் அறிமுக புகைப்படம் எடுத்தல், லோகோ வெளியிடுதல் போன்றவை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்றைய கூட்டத்தில் ஒருகிணைப்பாளர் அறிவிக்கப்படலாம் என்றும் அது பீகார் முதல்வர் நிதிஷ் குமாராக இருக்கலாம் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாக்கொண்டு இருக்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY


மேலும் படிக்க I.N.D.I.A: `தொகுதி பங்கீடு, செப். 30-ல் இறுதி முடிவு!’ - மும்பை கூட்டமும் அரசியல் நகர்வுகளும்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top