கருணாநிதி நினைவுதின அமைதிப் பேரணி | ஜனாதிபதியின் புதுச்சேரி விசிட் - News In Photos

0
திருநெல்வேலி: முனைஞ்சிபட்டி இந்திரா நகர்ப் பகுதி மக்கள், குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோ ஆப்டெக்ஸ் விற்பனை கண்காட்சியினை ஆட்சியர் கார்த்திகேயன் துவக்கிவைத்தார்.
தேனியில் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களின் சொத்து வரிகளை ரத்து செய்ய கோரிக்கை வைத்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, சென்னை ஓமந்தூரார் வளாகத்திலிருந்து கருணாநிதி நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் அமைதிப் பேரணியாகச் சென்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, சென்னை ஓமந்தூரார் வளாகத்திலிருந்து கருணாநிதி நினைவிடம் வரை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் அமைதிப் பேரணியாகச் சென்றனர்.
நாகர்கோவிலில் தி.மு.க., சார்பில் நடைபெற்ற கருணாநிதி நினைவுநாள் அமைதிப் பேரணி.
தேசிய கைத்தறி தின விழாவையொட்டி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் கைத்தறி கண்காட்சி விற்பனையை பார்வையிடும் பொதுமக்கள்.
மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்தும், என்.எல்.சி நிறுவனத்தைக் கண்டித்தும் தேனியில் தாய்த் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடம் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இடம்: மெரினா கடற்கரை, சென்னை
வேலூர் மாவட்ட காவல்துறையால் கழிவுசெய்யப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எஸ்.பி.மணிவண்ணன் தலைமையில் ஏலம் விடப்பட்டன.
தேசிய திறனாய்வு போட்டியில் மதுரையில் முதல் இடம் பிடித்த தூய மரியன்னை பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசளித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி அமைதிப் பேரணி... இடம்: சென்னை
கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு கோபாலபுரத்துக்கு வருகை தந்த ஸ்டாலின், கனிமொழி, துர்கா.
ஈரோட்டில் உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கார்ப்பரேட் நிறுவனங்களின் கால் டாக்சிகளை நீலகிரியில் தடுக்க வலியுறுத்தி, ஊட்டியில் வாடகை கார் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப்‌ போராட்டம் நடத்தினர்.
திருப்புல்லாணி அருகே பள்ளமோர் குளத்தில் குடிநீர் வேண்டி காலி குடங்களுடன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நோக்கி பெண்கள் மனு அளிக்க வந்தனர்.
வேலூர், காட்பாடி தி.மு.க சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் முகாமில், பாதுகாப்புக்காக போலீஸார் பலப்படுத்தப் பட்டிருந்தாலும், பல்வேறு பிரச்னைகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி, போலீஸாரின் பாதுகாப்பினை மீறியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை துரிதமாகச் செயல்பட்டு காப்பாற்றிய பத்திரிகையாளர்களை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இராமநாதபுரம் அருகே பெருநாழி கிராமத்தில் 30 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு கேக் வெட்டி ஊட்டி சைவ, அசைவ உணவு பரிமாறி மகிழ்ந்தனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்த குடியரசுத் தலைவரை கவர்னர் தமிழிசை வரவேற்றார்.
ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.யாக நாடாளுமன்றம் சென்றதுக்கு வாழ்த்து தெரிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம். இடம்: காங்கிரஸ் தலைமை அலுவலகம், சென்னை
தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணி.
சென்னையில் குதிரைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இடம்:சேப்பாக்கம்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்த குடியரசுத் தலைவரை முதல்வர் ரங்கசாமி வரவேற்றார்.

மேலும் படிக்க கருணாநிதி நினைவுதின அமைதிப் பேரணி | ஜனாதிபதியின் புதுச்சேரி விசிட் - News In Photos
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top