Siddique: நேசமணியைத் தந்தவர், விஜய்க்கு கம்பேக் கொடுத்தவர் - மலையாள இயக்குநர் சித்திக் காலமானார்!

0
மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்படும் பிரபல மலையாள இயக்குநர் சித்திக்.

தமிழில் 'ப்ரண்ட்ஸ்', 'எங்கள் அண்ணா', 'காவலன்', 'சாது மிரண்டா', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' போன்ற படங்களை இயக்கியுள்ளார். நடிகர் விஜய், சூர்யா, வடிவேலு, ராதாரவி, தேவயாணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இவரது 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அண்மையில் சித்திக், சிறுநீரகப் பிரச்னையின் காரணமாக கேரளா கொச்சியிலுள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையிலிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று (செவ்வாய்க் கிழமை) இரவு 9.10 மணிக்கு மாராட்டைப்பின் காரணமாகத் தனது 63வது வயதில் காலமானார்.

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கொச்சி அமிர்தா மருத்துவமனை நிர்வாகம், "திரைப்படத் தயாரிப்பாளரும் திரைக்கதை எழுத்தாளருமான சித்திக் அவர்களின் மறைவை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தக் கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் உள்ளன" என்று தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

சித்திக் உடல் கேரளா கடவந்திரா ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 9 மணி முதல் 11:30 மணி வரையிலும், பின்னர் அவரது இல்லத்திலும் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ப்ரண்ட்ஸ்: இயக்குநர் சித்திக், விஜய், சூர்யா

இயக்குநர் சித்திக், தற்போது முன்னணி நடிகராக இருக்கும் பகத் பாசிலின் தந்தையும், பிரபல இயக்குநருமான பாசிலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ஆரம்பக் காலங்களில் மிமிக்கிரி செய்து வந்த இவரின் திறமையைக் கண்டு பாசில் அவரை உதவி இயக்குநராக தன் படங்களில் பணியாற்ற வைத்தார். பின்னர், பாசில் தயாரிப்பில் 1989-ம் ஆண்டு 'Ramji Rao Speaking' படத்தின் மூலம் இயக்குநராகத் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இவரது முதல் படமே இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. இந்தப் படத்தைத் தான் தமிழில் பாசிலே 'அரங்கேற்ற வேளை' என்று ரீமேக் செய்தார்.

இதையடுத்து 'Harihar Nagar (1990)', 'Godfather (1991)', 'Vietnam Colony (1992)', 'Kabooliwala (1993)', 'Hitler (1996)' எனப் பல படங்கள் மூலம் மலையாளத் திரையுலகில் தரமான இயக்குநராக முத்திரைப் பதித்தார். இவர், மொத்தம் 20 படங்களை இயக்கியுள்ளார். தமிழில் குறிப்பாக 'ப்ரண்ட்ஸ்' படத்தின் நேசமணி பாத்திரம் சமீபத்தில்கூட சர்வதேச லெவலில் டிரெண்டானது. அது மட்டுமின்றி விஜய்க்கு 'காவலன்' படம் மூலம் கம்பேக் கொடுத்தவர் என்றும் சொல்லலாம். இப்படிப் பல தரமானப் படங்களைத் தந்து தமிழ், மலையாள ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் சித்திக். அவரது இந்த மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

மிஸ் யூ சித்திக்... உங்கள் படங்களால் நீங்கள் என்றும் நினைவுகூரப்படுவீர்.

மேலும் படிக்க Siddique: நேசமணியைத் தந்தவர், விஜய்க்கு கம்பேக் கொடுத்தவர் - மலையாள இயக்குநர் சித்திக் காலமானார்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top