கனவு -116 | பம்ப்கின் வேஃபர்ஸ் முதல் பம்ப்கின் சிதார் வரை | கோயம்புத்தூர் - வளமும் வாய்ப்பும்!

0
கோயம்புத்தூர் மாவட்டம்!

கோவை மாவட்டத்தின் வளங்களில் ஒன்றான பூசணிக்காயிலிருந்து பம்ப்கின் வேஃபர்ஸ் (Pumpkin wafer) என்ற புராடக்டை உருவாக்கலாம்.

பூசணிக்காய் கூழ், சர்க்கரை, லவங்கப்பட்டை, இஞ்சி, ஜாதிக்காய், உப்பு போன்றவற்றை அதனதன் தேவைக்கேற்ப சேர்த்து வேஃபர்ஸ் தயாரிக்கலாம். அதனுடன் சாக்லேட் சிப்ஸ்களைச் சேர்த்து 25 நிமிடங்களுக்கு பேக்கிங் அவனில் (Baking Oven) வெதும்ப வைக்க வேண்டும். பின்னர், பம்க்கின் வேஃபரின் சூடு தணிந்த பிறகு, உருகிய சாக்லேட்டில் அதனை நனைத்து, சுவைக்கலாம். சாக்லேட் மட்டுமின்றி, பெர்ரி வகைகள், சீஸ் எனப் பல்வேறு ஃபிளேவர்களிலும் பம்ப்கின் வேஃபர்ஸ் தயாரிக்கலாம்.

பூசணிக்காய் மற்றும் அதன் விதையில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் (Anti oxidants), பீட்டா கரோட்டின் (Beta carotene), சிறிய அளவிலான தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. பார்வைத் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி, தோல் ஆரோக்கியம் உள்ளிட்டவற்றில் வைட்டமின் ஏ பங்கு வகிக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு உடல்நல ஆரோக்கியத்தில் பங்கு வகிப்பதால், இதை பலரும் விரும்பிச் சுவைக்கின்றனர். குறிப்பாக, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் பம்ப்கின் வேஃபர்ஸ் பிரபலமான நொறுக்குத் தீனியாக இருக்கிறது.

ஜப்பானில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு (Sweet potato), ஆரஞ்ச், கிரான்பெர்ரி (Cranberry), எலுமிச்சை (Lemon), ஸ்ட்ராபெர்ரி சீஸ் (Strawberry-cheese), மாம்பழம், திராட்சை, மின்ட் சாக்லேட் (Mint-chocolate) உள்ளிட்ட சுமார் 30 வகையான ஃபிளேவர்களில் வேஃபர்ஸ் தயாரிக்கப்படுகின்றன என்பதால், இதற்கான சந்தை வாய்ப்பு சிறப்பாகவே இருக்கிறது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு, கோவை மாவட்டத்தில் வேஃபர்ஸ் தயாரிப்புக்கான தொழிற்சாலையை நிறுவுவதோடு, இதற்கான ஒரு பிராண்டை உருவாக்கி, சர்வதேச அளவில் பிரபலப்படுத்தலாம்.

கோவை மாவட்டத்தில் சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவில் பூசணி பயிரிடப்பட்டு, ஏக்கர் ஒன்றுக்கு 10 டன் வீதம் ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 25,000 டன் விளைச்சல் கிடைக்கிறது. மார்க்கெட்டில் 150 கிராம் கொண்ட ஒரு வேஃபரின் விலையை 160 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம்.

குக்கூர்பிடா மொஸாட்டா (Cucurbita moschata), குக்கூர்பிடா மேக்ஸிமா (Cucurbita maxima), லுஃபா அக்யூடாங்குலா (Luffa acutangula) போன்றவை பூசணிக்காய் வகைகளில் சில. இவற்றில் `பூசா சம்மர் ப்ராலிஃபிக் ரவுண்ட்' (pusa summer prolific round) வகை உண்ணக் கூடியது அல்ல. மிகப் பெரிய அளவில் உருண்டு, திரண்டு இருக்கும் இத்தகைய பூசணிக்காயைப் பயன்படுத்தி பாரம்பர்ய சிதார் (Sitar) இசைக்கருவியை உருவாக்கலாம்.

சிதார் ஒரு தனித்துவமான ஒலியைக் கொண்ட இசைக்கருவி. அந்த இசை உருவாக்கத்தில் பூசா சம்மர் ப்ராலிஃபிக் ரவுண்ட் பூசணிக்காயின் குடுவை பாகம் பேருதவி செய்கிறது. இந்த வகை பூசணிக்காய் மண்ணின் அமில-காரத் தன்மையைக் கணக்கில் கொள்ளப்பட்டே பயிரிடப்படுகின்றது. மண்ணிலிலுள்ள ஹைட்ரஜன் செறிவைக் கணக்கிட, பிஹெச் (pH - potential of Hydrogen ) என்ற குறியீடு பயன்படுகிறது. pH 7 அளவுள்ள மண்ணில் அமிலத்தன்மை இருக்காது. pH 7-க்கு மேல் இருந்தால் அந்த மண்ணில் காரத்தன்மை அதிகரிக்கத் தொடங்கும். pH 14 என்பது அதிகபட்ச காரத்தன்மை. இப்படியாகத்தான் பயிர்செய்கையின்போது மண் வளம் அளவிடப்படுகிறது.

pH 7 என்ற அளவு குறையத் தொடங்கும்போது, அதாவது, pH 6.5 தொடங்கி pH 1 வரை அமிலத்தன்மையானது அதிகரித்து காணப்படும். pH 1 என்பது அதிகபட்ச அமிலத்தன்மை. இந்த அளவீட்டின்படி கோவையின் மண்ணின் தன்மையானது pH 6.5 முதல் pH 7.5 வரை இருப்பதால், இது ஒரு நடுநிலையான அளவாகும். எனவே, பூசா சம்மர் ப்ராலிஃபிக் ரவுண்ட் பயிரானது இங்கு செழித்து வளர வாய்ப்பிருக்கிறது. கோவையில் தற்போது பயிரிடப்படும் ‘குக்கூர்பிடா மாக்ஸிமா’ (Cucurbita maxima) வகை பூசணிக்காயே பயிரிடப்படுகிறது. இதனுடன் ‘பூசா சம்மர் ப்ராலிஃபிக் ரவுண்ட்’ வகையையும் பயிரிட பரிந்துரைக்கலாம். அவ்வாறு பயிரிடப்படும் பூசணிக்காயை கொள்முதல் செய்து, சிதார் வகை இசைக்கருவியை உருவாக்கப் பயன்படுத்துவதோடு, அதற்கான தொழிற்சாலையை கோவை மாவட்டத்தில் அமைக்கலாம்.

சந்தையில் ஒரு பம்ப்கின் சிதார் விலை சுமார் 35,000 ரூபாய் வரை விற்பனை தொடங்குகிறது. அதன் வடிவமைப்புக்கு ஏற்ப விலை மாறுபடுகிறது. எனவே, பூசா சம்மர் ப்ராலிஃபிக் ரவுண்ட் வகை பூசணிக்காய்க்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளதால், அதன் வழியே பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருமான வாய்ப்பை பெறலாம்.

(இன்னும் காண்போம்...)

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY


மேலும் படிக்க கனவு -116 | பம்ப்கின் வேஃபர்ஸ் முதல் பம்ப்கின் சிதார் வரை | கோயம்புத்தூர் - வளமும் வாய்ப்பும்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top