`ஜெயலலிதாவுக்கு 1.5 கோடி தொண்டர்கள், இப்போது இபிஎஸ்-ஸுக்கு 2.44 கோடி தொண்டர்கள்!' - ஆர்.பி.உதயகுமார்

0

"சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று 44 சதவிகிதம்பேர் ஆதரவளித்துள்ளனர்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆர்.பி.உதயகுமார், ``எம்.ஜி.ஆர் காலத்தில் அ.தி.மு.க-வில் 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர், ஜெயலலிதா காலத்தில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருந்தனர், தற்போது எடப்பாடியார் காலத்தில் 2.44 கோடி தொண்டர்கள் உருவாகி உள்ளனர். இன்று எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் சிம்மசொப்பனமாக எடப்பாடியார் உள்ளார்.

எடப்பாடியார் தலைமையில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் 15 லட்சம் பேர் மைதானத்திற்கு வந்தனர். 35 லட்சம் பேர் வெளியில் இருந்தனர். மேலும், தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களும் மாநாட்டை வாழ்த்தினார்கள். இது குறித்து உளவுத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளதால், தி.மு.க அரண்டு போயிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று 44 சதவிகிதம் பேர் ஆதரவளித்துள்ளனர். ஸ்டாலினுக்கு 14 சதவிகிதம் பேர் மட்டும் ஆதரவளித்து கடைசி இடத்தில் தள்ளப்பட்டுள்ளார். இந்து பண்டிகையான ஓணத்திற்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர், இந்து பண்டிகையான தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூற மறுத்து தமிழகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறார்.

இவர் எப்படி இந்தியா கூட்டணியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்... அவர் காண்பது பகல் கனவாகும், இன்று அதிகாரிகள் மனமுடைந்து மத்திய அரசு பணிக்கு திரும்புகின்றனர்.

தற்போது ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு ஜனாதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எடப்பாடியார் ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் மத்தியில் மோடி பிரதமராக வருவார், தமிழகத்தில் எடப்பாடியார் முதலமைச்சராக வருவது நிச்சயம்.

ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நீடிக்காது. ஆயுள் காலம் முடியவுள்ளது. இந்த அரசின்மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். மீண்டும் எடப்பாடியார் எப்போது வருவார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY


மேலும் படிக்க `ஜெயலலிதாவுக்கு 1.5 கோடி தொண்டர்கள், இப்போது இபிஎஸ்-ஸுக்கு 2.44 கோடி தொண்டர்கள்!' - ஆர்.பி.உதயகுமார்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top