``2024-க்குப் பிறகு நாம் தமிழர் கட்சி இருக்காது" என்ற அண்ணாமலையின் விமர்சனம்? - ஒன் பை டூ

0

சே.பாக்கியராசன், செய்திப் பிரிவுச் செயலாளர், நா.த.க

“தேர்தலுக்குத் தேர்தல் நோட்டாவுடன் போட்டி போடும் ஒரு கட்சி, எங்களை விமர்சிப்பது வியப்பாக இருக்கிறது. பா.ஜ.க-வின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமியே ‘அண்ணாமலை யார்... தமிழ்நாட்டில் பா.ஜ.க என்ற ஒரு கட்சி இருக்கிறதா..?’ என்று கேட்டதையெல்லாம் மறந்துவிட்டாரா அண்ணாமலை... தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி நாங்கள்தான். அ.தி.மு.க-வின் முதுகில் ஏறிப் பயணித்து, நான்கு சட்டமன்ற இடங்களைப் பிடித்துக்கொண்ட பா.ஜ.க., `நாம் தமிழர் கட்சி இருக்காது’ என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வளவு வீராப்புப் பேசும் அண்ணாமலையால், அந்த நான்கு இடங்களையும் ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலைச் சந்திக்க முடியுமா... அந்தத் தேர்தலில் நாம் தமிழரைவிட அதிக வாக்குகள் வாங்கிக் காட்ட முடியுமா... `தேர்தலைத் தனித்துச் சந்திக்கிறோம்’ என்று சொல்லக்கூட அதிகாரமில்லாதவர் அண்ணாமலை. நாம் தமிழர் வாக்குக்கும் கூட்டத்துக்கும் பணம் கொடுத்து ஆட்களைச் சேர்த்ததில்லை என்பது தமிழகம் அறிந்த உண்மை. ஆனால், பா.ஜ.க நடத்திக்கொண்டிருக்கும் பாதயாத்திரைக்குப் பணம் கொடுத்தும் கூட்டம் சேரவில்லை. தன்னந்தனியாக யாத்திரை போய்க்கொண்டிருக்கும் அண்ணாமலை, தன்னை மக்கள் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காக நாம் தமிழர் கட்சியை வம்புக்கு இழுத்திருக்கிறார். பா.ஜ.க-வைப்போலக் கூட்டணியில் அல்ல, தனித்து நின்று தேர்தலைச் சந்தித்திருக்கிறோம் நாங்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க என்ற கட்சி எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை!”

சே.பாக்கியராசன், நாராயணன் திருப்பதி,

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். ஒரு ஜனநாயக நாட்டில் எதற்கெடுத்தாலும் ஒரு சாரார்மீது வெறுப்பை உமிழ்பவர்களை மக்கள் கண்டிப்பாகப் புறக்கணிப்பார்கள். நாம் தமிழர் கட்சியை மட்டுமன்றி, இந்து மதத்தின் மீதும், இந்து மக்களின் மீதும் தொடர்ந்து வெறுப்பை விதைக்கும் தி.மு.க-வையும் தமிழக மக்கள் தூக்கி எறியும் காலம் தொலைதூரத்தில் இல்லை. ஒருகாலத்தில், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு ஓர் எதிர்க்கட்சியாக நாம் தமிழரைப் பின்பற்றினார்கள். ஆனால், வெகு விரைவிலேயே நாம் தமிழர் கட்சி, தி.மு.க-வுக்கு எதிரான கட்சி கிடையாது என்ற உண்மையை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். அந்தக் கட்சியிலிருந்து பலரும் தற்போது பா.ஜ.க-வைப் பின்தொடர்கிறார்கள் என்பதே கள நிலவரம். தமிழகத்தில் தொடர்ச்சியாக பா.ஜ.க தன்னுடைய வாக்குவங்கியை வெகுவாக வலுப்படுத்திக்கொண்டே வருகிறது. பெரும் அரசியல் மாற்றத்தை பா.ஜ.க செய்துகொண்டிருக்கிறது. அண்ணாமலை தி.மு.க அரசின் ஊழல்களை மக்களிடம் எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்த விவகாரத்தைத் திசை மாற்றவே பா.ஜ.க - தி.மு.க என்று இருக்கும் தமிழக அரசியல் நிலையை, பா.ஜ.க - நாம் தமிழர் என்று மடைமாற்றும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். உண்மையில் சீமான் ஒரு விளம்பரப் பிரியர். எப்போதும் ஏடாகூடமாக ஏதாவது ஓர் எதிர்மறைக் கருத்தைச் சொல்ல வேண்டும். செய்திகளில் இடம்பெற வேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கமாக இருக்கிறது. அவரையும், அவர் கட்சியையும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதையெல்லாம் கடந்து செல்வதே சரி!”


மேலும் படிக்க ``2024-க்குப் பிறகு நாம் தமிழர் கட்சி இருக்காது" என்ற அண்ணாமலையின் விமர்சனம்? - ஒன் பை டூ
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top